நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, “ பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் இன்னும் சாத்தியப்படவில்லை.
இப்போது அதே கேள்வியை
மீண்டும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம். ‘உண்மையிலேயே நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்றுவர முடியுமா?’ அதற்கு ‘முடியும்’ என்றுதான் பதில் சொல்கிறது அறிவியல். மறுக்கவே முடியாத கணிதச் சமன்பாடுகள் மூலம், காலப் பயணம் சாத்தியமே என்று நிறுவுகிறது அறிவியல். இறந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ நம்மால் பயணம் செய்ய முடியும் என்று அறிவியல் சொல்கின்றது என்றால், ‘நாம் ஏன் இன்னும் அந்தக் காலங்களுக்குப் பயணம் செய்யவில்லை?’ என்ற கேள்வியும் நமக்கு எழுவது இயல்புதானே! இன்றுவரை நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியவில்லையென்றால், அது சாத்தியமற்றது என்றுதானே அர்த்தமாகின்றது. நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடந்து முடிந்து, இறந்து போன காலத்துக்கு நம்மால் மீண்டும் செல்லலாம் என்று யாராவது சொல்லும்போது, நம்ப முடியாமல் நமக்குள் ஒரு கேலிச் சிரிப்பொன்றுதான் வெளிப்படும். நேற்றைக்கோ, முந்தா நேற்றைக்கோ நம்மால் மீண்டும் செல்லலாம் என்று சொன்னால் அதை எப்படி நம்பமுடியும்? இறந்துபோன மனிதரையும், இறந்துபோன காலத்தையும் எப்படி நாம் திரும்பிப் பார்க்க முடியும்? கனவிலோ, கற்பனையிலோ அது சாத்தியமாகலாம். நிஜத்தில் அது எப்படிச் சாத்தியமாகும்?
“இல்லை, நாம் நினைப்பது அனைத்தும் தவறு. அவையெல்லாம் சாத்தியம்தான்” என்று சொல்கிறது நவீன இயற்பியல். ‘காலம்’, ‘வெளி’ (Time, Space) ஆகிய இரண்டைப் பற்றியும் சரியாக நாம் புரிந்து கொள்ளாத வரையில், இவை சாத்தியமற்றவை என்றுதான் நினைத்துக் கொள்வோம். இவற்றைப் பற்றிப் புரிந்துகொண்டுவிட்டால், இவற்றின் சாத்தியங்களும் நமக்குப் புரிய ஆரம்பிக்கும். காலத்தினூடாகப் பிரயாணம் செய்வதற்கு நமக்குத் தேவையானது வேகம். சாதாரண வேகம் இல்லை, ஒளியின் வேகம். ஒளி அல்லது வெளிச்சம் எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ, அந்த வேகத்தை நாம் அடைய முடியுமானால், நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். நேற்று மாட்டு வண்டியில் ஊர்ந்து சென்ற நம் வேகம், படிப்படியாகக் கார், விமானம், ராக்கெட் என்று வேகத்தில் இன்று அதிகரித்து நிற்கிறது அல்லவா? அதுபோல, நாளை ஒளியின் வேகத்திலும் நாம் பயணம் செய்யும் வேளையும் வரும். அப்போது, காலத்தினூடாக நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகம் என்பது ரொம்ப அதிகமெல்லாம் கிடையாது. வெறும் 3 இலட்சம் கிலோமீட்டர் ஒரு செக்கனுக்கு. சரியாக வாசியுங்கள், ஒரு செக்கனுக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இதுவரை நம் அறிவின்படி, அதிக வேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். ஒளியை விட வேறு எந்தப் பொருளும் வேகமாகப் பயணிக்க முடியாது என்கிறது இன்றைய அறிவியல். ஒருவேளை ‘ஏதாவது ஒன்று’ ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், அல்லது அந்த ‘ஏதாவது ஒன்று’ நாமாக இருந்தால், நம்மால் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ய முடியும். “நடக்காத ஒன்றை, நடக்கும் என்று சொல்லி நம்மை ஏமாற்றப் பார்க்கிறது அறிவியல்” என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர்கள் நமக்கு முன்னே வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் திகைத்துப் போவீர்கள்.
உலகநாடுகளில் சில இணைந்து ‘விண்கப்பல்’ (The International Space Station-ISS) ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தன. விண்வெளியை ஆராய விரும்பும் நாடுகள், தங்கள் அஸ்ட்ராநாட்டுகளை அங்கு அனுப்பி, பல நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கும். அங்கு செல்பவர்கள் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் கூடத் தங்கியிருந்திருக்கிறார்கள். இந்த விண்கப்பல் கிட்டத்தட்ட 415 கிலோ மீட்டர் உயரத்தில், மணிக்கு 27600 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘சேர்கை அவ்டேஜேவ்’ (Sergei Avdeyev) என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர், 747 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து தன் ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். அதாவது பூமிக்கு மேலே 747 நாட்கள், 27000 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். அவர் செய்த அதிவேகப் பிரயாணத்தின் மூலம், பூமியில் வசிக்கும் நம்மைவிட 0.02 செக்கன்கள்
இப்போது அதே கேள்வியை
மீண்டும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம். ‘உண்மையிலேயே நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்றுவர முடியுமா?’ அதற்கு ‘முடியும்’ என்றுதான் பதில் சொல்கிறது அறிவியல். மறுக்கவே முடியாத கணிதச் சமன்பாடுகள் மூலம், காலப் பயணம் சாத்தியமே என்று நிறுவுகிறது அறிவியல். இறந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ நம்மால் பயணம் செய்ய முடியும் என்று அறிவியல் சொல்கின்றது என்றால், ‘நாம் ஏன் இன்னும் அந்தக் காலங்களுக்குப் பயணம் செய்யவில்லை?’ என்ற கேள்வியும் நமக்கு எழுவது இயல்புதானே! இன்றுவரை நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியவில்லையென்றால், அது சாத்தியமற்றது என்றுதானே அர்த்தமாகின்றது. நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடந்து முடிந்து, இறந்து போன காலத்துக்கு நம்மால் மீண்டும் செல்லலாம் என்று யாராவது சொல்லும்போது, நம்ப முடியாமல் நமக்குள் ஒரு கேலிச் சிரிப்பொன்றுதான் வெளிப்படும். நேற்றைக்கோ, முந்தா நேற்றைக்கோ நம்மால் மீண்டும் செல்லலாம் என்று சொன்னால் அதை எப்படி நம்பமுடியும்? இறந்துபோன மனிதரையும், இறந்துபோன காலத்தையும் எப்படி நாம் திரும்பிப் பார்க்க முடியும்? கனவிலோ, கற்பனையிலோ அது சாத்தியமாகலாம். நிஜத்தில் அது எப்படிச் சாத்தியமாகும்?
“இல்லை, நாம் நினைப்பது அனைத்தும் தவறு. அவையெல்லாம் சாத்தியம்தான்” என்று சொல்கிறது நவீன இயற்பியல். ‘காலம்’, ‘வெளி’ (Time, Space) ஆகிய இரண்டைப் பற்றியும் சரியாக நாம் புரிந்து கொள்ளாத வரையில், இவை சாத்தியமற்றவை என்றுதான் நினைத்துக் கொள்வோம். இவற்றைப் பற்றிப் புரிந்துகொண்டுவிட்டால், இவற்றின் சாத்தியங்களும் நமக்குப் புரிய ஆரம்பிக்கும். காலத்தினூடாகப் பிரயாணம் செய்வதற்கு நமக்குத் தேவையானது வேகம். சாதாரண வேகம் இல்லை, ஒளியின் வேகம். ஒளி அல்லது வெளிச்சம் எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ, அந்த வேகத்தை நாம் அடைய முடியுமானால், நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். நேற்று மாட்டு வண்டியில் ஊர்ந்து சென்ற நம் வேகம், படிப்படியாகக் கார், விமானம், ராக்கெட் என்று வேகத்தில் இன்று அதிகரித்து நிற்கிறது அல்லவா? அதுபோல, நாளை ஒளியின் வேகத்திலும் நாம் பயணம் செய்யும் வேளையும் வரும். அப்போது, காலத்தினூடாக நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகம் என்பது ரொம்ப அதிகமெல்லாம் கிடையாது. வெறும் 3 இலட்சம் கிலோமீட்டர் ஒரு செக்கனுக்கு. சரியாக வாசியுங்கள், ஒரு செக்கனுக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இதுவரை நம் அறிவின்படி, அதிக வேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். ஒளியை விட வேறு எந்தப் பொருளும் வேகமாகப் பயணிக்க முடியாது என்கிறது இன்றைய அறிவியல். ஒருவேளை ‘ஏதாவது ஒன்று’ ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், அல்லது அந்த ‘ஏதாவது ஒன்று’ நாமாக இருந்தால், நம்மால் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ய முடியும். “நடக்காத ஒன்றை, நடக்கும் என்று சொல்லி நம்மை ஏமாற்றப் பார்க்கிறது அறிவியல்” என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர்கள் நமக்கு முன்னே வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் திகைத்துப் போவீர்கள்.
உலகநாடுகளில் சில இணைந்து ‘விண்கப்பல்’ (The International Space Station-ISS) ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தன. விண்வெளியை ஆராய விரும்பும் நாடுகள், தங்கள் அஸ்ட்ராநாட்டுகளை அங்கு அனுப்பி, பல நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கும். அங்கு செல்பவர்கள் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் கூடத் தங்கியிருந்திருக்கிறார்கள். இந்த விண்கப்பல் கிட்டத்தட்ட 415 கிலோ மீட்டர் உயரத்தில், மணிக்கு 27600 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘சேர்கை அவ்டேஜேவ்’ (Sergei Avdeyev) என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர், 747 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து தன் ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். அதாவது பூமிக்கு மேலே 747 நாட்கள், 27000 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். அவர் செய்த அதிவேகப் பிரயாணத்தின் மூலம், பூமியில் வசிக்கும் நம்மைவிட 0.02 செக்கன்கள்
posted from Bloggeroid
No comments:
Post a Comment