காய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...
Labels: காயகற்பம், சாகாக் கலை, சித்தர் பாடல்
"யோகமாம் புளியுப்பு எண்ணெய் சுண்ணம்
உரிசையா மாங்கிசங்கள் மச்சமாகா
மோகமா மோரோடு கடுகு உள்ளி
முதிரான காரமமொடு பெருங்காயந்தான்
போகமாய் பெண்ணுட புணர்ச்சியோடு
பேரான நித்திரையும் சோம்பல் தள்ளி
வாகமாம் வாசிதனை மறித்துக் கொண்டு
மறவாமல் இரவு பகல் மனது உன்னே"
புளி, உப்பு, எண்ணைவகை, மோர், கடுகு, உள்ளி, மது, மங்கை, மாமிசம் புசித்தல், அதிக காரமும், பெருங்காயமும், நேரம் தவறி உறங்குதல், சோம்பல்குணம், இரவு பகல் எந்நேரமும் காய கற்பம் உண்பதை நினைத்திருந்து இவற்றை கட்டாயம் நீங்க வேண்டும்.
"உன்னியே பாலோடு நெய்யைக் கூட்டு
ஒருசேர சமைத்துண்டு ஒரு போதையா
பண்ணியே ராமாறு பாலைக்கொள்ளு
பணியாரம் சிறு பயறு பழமும் தேனாம்
குன்னியே கோரக்கர் கற்பமாகும்
போமென்ற புளிமேல் ஆசையானால்
புளியாரை புளியரணை சீக்காய்க்கொழுந்து
நேமென்ர நெல்லிக்காய் பசலைக் கீரை
நித்தியமாய்க் கூட்டியே கற்பமுண்ணு
ஆமென்ற பயரோடு யிளநீருங்கரும்பும்
ஆகாது குளிர்ந்த தண்ணீர் தானுங்காணே"
பால், நெய், சிறு பயறு வகை, பழங்கள், தேன் கற்பத்திற்கு உண்ணக் கூடியவை என்றும், புளி சேர்க்காமல் சாப்பிட முடியாதவருக்கு புளியாக் கீரை, பசலைக் கீரைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், கரும்பும், இளநீரும் , குளிர் நீரும் சேர்க்கக் கூடாது என்றும் போகர் சொல்கிறார்.
மேலும் கற்பம் உண்ணும் காலத்தில் குடிப்பதற்க்கு நீர் தயாரிக்கும் முறை ஒன்றும் சொல்கிறார்கள் சித்தர்கள். அது அருகம்வேர் ஒரு கை அளவும், மிளகு 25 தும் சேர்த்து இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை விட்டு அதை எட்டில் ஒன்றாகக் காய்ச்சி, வடிகட்டிப் பருகலாம் என்கிறார்கள்.
காய கற்பம் பற்றி...
Labels: காயகற்பம், காயசித்தி, சாகாக் கலை,சித்த மருத்துவம்
பொதுவாகச் சித்தர்கள் நீடூழி காலம் வாழ்வதற்காக செய்யும் மருந்தின் பெயர் தான் காய கற்பம். இதற்க்குச் சரகா மருந்தென்றும் சொல்வார்கள். இது உடம்பைப் பலப் படுத்தி, சாகாமல் இருக்கவும், மூப்பு, பிணி, பசி , இளைப்பு, தாகம், நித்திரை போன்றவைகள் வராமலும், எப்போதுமே உடல் இளமையுடன் இருக்கவும் அவர்கள் உண்ட மருந்தே இந்தக் காய கற்பமாகும்.
இதற்கான மூலிகைகளும், இந்த கற்ப மருந்தை தயாரிக்கும் முறைகளையும், சாப்பிட வேண்டிய நேர காலத்தையும், சித்தர்கள் அவரவர் அனுபவங்களுக்கேற்ப கூறியுள்ளனர். இவற்றை அவர்கள் வைத்திய காவியங்களில் விளக்கியுள்ளனர்.
"கற்பத்தை யுண்டல் காயமழியாது
கற்பத்தினாலே காணலாம் கலையை
கற்பத்தினாலே காணலாம் சோதியை
கற்பத்தினாலே காலையும் கட்டி டே
கட்டிட சித்தாம் காயப் பரீட்சை"
- என்கிறார் சட்டை முனி.
இதுபோல காய கற்பம் சாப்பிட்டவர்கள் உடல் எப்படி இருக்கும் என்று கோரக்கர் சொல்கிறார்,
"காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்"
"வேலணைய கத்திவாள் வேட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!"
- என்பார் கோரக்கர்.
இப்படியாகப் பட்ட இந்த காய கற்ப மருந்து செய்யும் முறைகளைப் பல சித்தர்கள் பல விதங்களில் சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் இங்கு பதிவது படிப்பவர்களினதும், எழுதும் எனதும் கால நேரங்களை விரயமாக்கும் என்பதால், தற்காலத்தில் எல்லோராலும் இலகுவாகச் செய்யக் கூடிய சில வழிகளை மட்டும் சொல்லவிருக்கிறேன்..
அடுத்த பதிவில், இந்த காய கற்ப மருந்து உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய பத்திய முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.
சாகாக் கலை எனப்படும் காயகற்பம்....
Labels: காயகற்பம், சாகாக் கலை
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு"
- திருக்குறள் -
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம், என்பார் திருவள்ளுவர்.
இந்த நிலையாமையை நீக்க எந்த வழியும் இல்லையா?
நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் இவைகளை எந்த அறிவியல் மேதைகளாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஏன் முடியாது? முடியும் என்றால் எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டவர்களும், இவற்றிலிருந்து மீண்டவர்களும் சித்தர்கள் மட்டுமே. பிணியையும், மூப்பையும் வெல்லவும், இளமை குன்றாமலும், மரணம் அண்டாமலும் தங்கள் உடலைப் பாதுகாக்கும் வழிகளைத் தெரிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே.அந்த வழிகளை மக்கள் பயன்பெற பாடல்களில் எழுதியும் வைத்தனர். இவ்வாறு தங்கள் உடலைப் பேணும் சித்தர்களின் முறையே சாகாக் கலை எனப்படும் காயகற்ப முறையாகும்.
காயம் என்றால் உடல் கற்பம் என்றால் அழியாது வைத்திருக்கும் மருந்து. ஆகவே உடலை அழியாது வைத்திருக்கச் செய்வதே காயகற்பம் எனப்படும்.
"சாவாதிருந்திடப் பால்கற - சிரம்
தனிலிருந்திடும் பால்கற
வேவாதிருந்திடப் பால்கற - வேறு
வெட்டவெளிக்குள்ளே பால்கற!"
- என்பார் இடைக் காட்டுச் சித்தர்
இனி,
உடலை அழியாது பேண, அதாவது நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்பவற்றிலிருந்து உடலைக் காக்க என்ன என்ன காயகற்ப முறைகளைச் சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்..
Wikipedia
Search results
Tuesday, 8 December 2015
சாகாக் கலை எனப்படும் காயகற்பம் sithargal ulagam 7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment