மகாமுனி பாபாஜி மகராஜ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் இருந்து...
லாஹிரி மகாசயரின் சீடர்களால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையைக் குறிக்கும் பட்டங்கள்; மகாமுனி பாபாஜி மகராஜ் (உயர்ந்த பேரானந்தப் பெருமான்), மகாயோகி (உயர்ந்த யோகி) மற்றும் த்ரயம்பக் பாபா அல்லது சிவ பாபா (சிவ அவதாரங் களின் பட்டங்கள்) முதலியன.
“பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித் தாலும் அந்த பக்தன் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசையை ஈர்க்கிறான்,” என்று லாஹிரி மகாசயர் கூறியுள்ளார்.
“பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது அடை யாளம் கண்டுகொள்வதோ சாத்தியம்.
“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத மான சம்பவங்களைப் பற்றி நான் அறிவேன்.
“ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு அவருடைய சீடர்கள் சுட்டெரியும் பெருந்தீ உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின் வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.
“ஐயா, எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை வெளியிட்டார்.
“அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன் கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப் போவதை நீ பார்க்க வேண்டும்?”
இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப் படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன் சீடனின் தோளின் மேல் வைத்தார். “வேதனை நிறைந்த மரணத் திலிருந்து உன்னை நான் இன்றிரவு விடுவித்து விட்டேன். இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு துன்பத்தின் மூலமாக கர்மவினையின் விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது" என்றார்.
இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால் இடையூறு விளைந்தது. குருவின் கூடாரத்திற்கருகே ஏறுவதற்குரிய ஒரு பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்க திறனுடன் அவன் ஏறி வந்துவிட்டான்.
“ஐயா, தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க வேண்டும்” அம்மனிதனின் முகம் விண்டுரைக்க இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது. “செல்வதற்கரிய இச்செங்குத்து மலைப்பாறைகளில் மாதக் கணக்கில் இடை விடாமல் தங்களைத் தேடிக் கொண்டி ருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.”
மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம் கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக் காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா விடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடைய உங்கள் வழிகாட்டு தலை நான் பெறாவிடில் இனி வாழ்ந்து பயனில்லை.’
“அப்படியானால் குதி, உன் தற்போதைய வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது,” பாபாஜி எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கூறினார்.
அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத் தான பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான். அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி பாபாஜி கட்டளையிட்டார்.
அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன் திரும்பியவுடன் குருதேவர் தன் கையை இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார். அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.
“நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக உள்ளாய்” உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில் தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில் இப்பொழுது நீயும் ஒருவன்’என்றார்.
No comments:
Post a Comment