Wikipedia

Search results

Tuesday, 8 December 2015

அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...

அகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...
Labels: அகத்தியர், சித்தர் பாடல், மூலிகைகள்,வசியங்கள்
"ஆகுவா யம்பலவா புலஸ்தியா கேள்
அப்பனே பூனைத்தா ள்வணங்கு மேனி
வகுடனே சாபமத்தை நீக்குவதற்கு
வளம் பெரிய பிரணவமே தேன்றாக்கால்
சாகுயடைய வட்சரமாம் தூ தூ வாகும்
சதுர மன்னர் தான் மயங்குந் தழை தானாகும்
நாகுடனே லட்சமுருவோ துவோது
நாயக னேநாடெல்லாம் வைசியந் தானே" 
 
- அகத்தியர் மாந்திரீக காவியம் - 
 
விளக்கம் :- 
புலஸ்தியன் என்ற என் சீடனே கேள், பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

No comments:

Post a Comment