Wikipedia

Search results

Tuesday, 8 December 2015

Sithargal ulagam 6

எது துறவு?, ஏன் துறவு?
Labels: திருமந்திரம், திருமூலர், துறவு
அந்தக் காலத்தில் துறவு அல்லது துறவி என்றதும் உற்றார் உறவினர்கள், சொத்து சுகங்களைத் துறந்து காடுகளில் போய் தனித்திருப்பது என்பதாகவும், இக் காலத்திலோ மடம் ஒன்றை அமைத்து அதில சிஷ்யர்கள் புடை சூழ சகல சுகபோகங்களுடன் வாழ்வதுமே துறவு என்பதான எண்ணப் போக்கு பொதுவில் நிலவுகிறது.
சித்தரியலில் துறவு என்பது மேலே சொன்ன புற பற்றுக்ள் போலல்லாது, அகப் பற்றுக்கள் அனைத்தையும் துறத்தலே துறவாக கருதப் படுகிறது. அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர் பெருமக்கள் குடும்ப அமைப்புகளில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்து வாழ்ந்தது நாம் அறிந்ததே. லாஹிரி மகாசயர் குடும்ப அமைப்பில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்தவர் என்று அவரது குரு மகாமுனி பாபாஜிஅவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 
உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே
 
எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும், பெய்த மழையால் மகிழ்ந்த உழவன், உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தர, களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார்திருமூலர்.
பிறந்தும் இறந்தும் பல பேதைமை யாலே
மறந்து மலாவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளியாமே
 
மேலும் அறியாமையால் பிறந்தும் இறந்தும் அவற்றை மறந்தும் ஆணவ மலம் என்னும் இருளில் மனிதர்கள் மூழ்கி உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் திருமூலர். மேலான குருவின் வழிகாட்டுதலில் பற்றுக்களைத் துறக்கும் நேரத்தில், உயிர்களுக்குள் சுடர் விட்டு விளங்கும் பேரொளியான சிவன் நமக்குள்ளும் துலங்குவார் என்பதை துறவால் ஏற்படும் பயனாக கூறுகிறார்.
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே
 
அனைத்தையும் துறந்தவன்; ஒருவரும் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளவன்; எமனைத் துறந்தவர்களுக்கு நண்பன்; விருப்பு, வெறுப்புக்கள் அற்றவன்; எப்பொருளிலும் பற்றில்லாதவன் என இத்தனை சிறப்புகளை கொண்ட சிவனின் நிலையை நாம் அடைய வேண்டுமெனில் நாம் நம்மை சூழ்ந்துள்ள பற்றுகளை அறிந்து விலக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.
பற்றைத் துறப்பது சாதாரண காரியமா என்ற மலைப்பு அனைவருக்கும் ஏற்படலாம். குருவருளின் துணை இருந்தால் எல்லாம் சாத்தியமே. 
 

குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
Labels: குண்டலினி, திருமந்திரம், திருமூலர்
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை தொடரின் இறுதியில் பகிர்வதாக கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன். நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
 
குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
 
- திருமூலர்.
 
மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
- திருமூலர்.
 
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்" 
 
-அருணகிரிநாதர்.
 
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.
பிற்சேர்க்கை: பஞ்சாக்கர எழுத்துக்கள் பற்றிய எனது பழைய பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.


ஹோமங்களின் அறிவியல்!
அகத்தியர், திருமந்திரம், திருமூலர்,யாகம்
ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.
ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.
ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.
அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.
யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.
பதிவின் நீளம் கருதி யாகம் தொடர்பான மேலதிக தகவல்களை நாளை தொடர்கிறேன்.
 

சமாதி நிலை - ஓர் அறிமுகம்

சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் "நான்" "எனது" "என்னுடையது" என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.
இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே"
- திருமந்திரம் -
"சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே"
 
- திருமந்திரம் -
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன...
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி
இனிவரும் பதிவுகளில் இவற்றைத் தனித்தனியாகவும், விளக்கமாகவும் பார்ப்போம்.

முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!

ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.
முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.
இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.
இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே"
- திருமூலர்-
தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள் என்கிறார்.

திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச்சி...
பஞ்சாக்கர எழுத்துக்களைப் பற்றிய அறிமுகத்தினையும், ஐம்பத்தியோரு எழுத்துக்களைப் பற்றியும், மகிமை வாய்ந்த இந்த எழுத்துக்கள் மனித உடலின் பாகங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று இந்த எழுத்துக்கள் ஆட்சி செய்திடும் அவயங்கள் பற்றியும் அவற்றின் தத்துவார்த்த குறியீடுகளை குறித்து நான் அறிந்தவகையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
 
பஞ்சாக்கர எழுத்துக்கள் ஆட்சி செய்யும் அவயங்கள் என திருமூலர் கூறிடும் பட்டியலை கான்போம்.
 
திருமுடி, நெற்றி, வலக்கண், இடக்கண், வலது செவி, இடது செவி, வலது மூக்கு, இடதுமூக்கு, வலதுகன்னம், இடதுகன்னம், மேலுதடு, கீழுதடு, மேல்வாய்ப்பல், கீழ்வாய்ப்பல், தாடை, உச்சந்தலை, வலக்கை, இடக்கை, வலது திருவடி, இடது திருவடி, வலது விலா, இடது விலா, குலை( மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள உறுப்பு), கீழ்வயிறு, வயிறு, குறி, வித்து, மூலாதாரம், குதம், தொண்டைக் குழி, இடது மார்பு, வலதுமார்பு, உச்சி, ஆக்கினை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவதிஷ்டானம், தொடை, முழந்தாள், கணுக்கால், இதயம், நாக்கு, முள்ளந்தண்டு, மூளை, சிறுநீர்ப்பை, இடுப்புக்கூடு, சிறுநீரகம், ஈரல், மண்டையோடு, புருவமத்தி என ஐம்பத்தியொரு அவயங்களை குறிப்பிடுகிறார்.
 
இந்த அவயங்களுக்கு உரிய எழுத்துக்களை குருமுகமாய் அறிந்து அதற்கான யோகம் செய்ய்வதே சிறப்பு என்பதால் அந்த தகவலை மட்டும் இங்கே தவிர்க்கிறேன். முறையான பயிற்சியும், பக்குவ நிலையினை அடைந்தவரே இந்த சூட்சுமத்தினை மற்றவருக்கு அருள வேண்டுமென விதியிருப்பதால் முழுமையாக கூறிட இயலவில்லை. எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இனி இந்த பஞ்சாக்கர எழுத்துக்களின் பின்னாலிருக்கும் தத்துவ விளக்கத்தினை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
 
"மண்டலம் ஐந்து வரைகளுள் ஈர் ஆறு
கொண்டிட நிற்க்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே"
 
- திருமந்திரம் -
 
நமது ஆத்மாவை ஐந்து வகையான மண்டலங்களும், பன்னிரெண்டு காவல்களும் நிறைத்திருப்பதாகவும். நமக்குள் ஆறுவகையான குடிகள் இருப்பதாகவும், இந்த உடலை எட்டு கண்ணியர் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்.
 
இதில் ஐந்து மண்டலங்கள் என்பது பூமி மண்டலம், நீர் மண்டலம், வாயு மண்டலம், தீ மண்டலம், ஆகாய மண்டலம் என பஞ்சபூத கூறுகளை உணர்த்துகிறது.
 
பன்னிரெண்டு காவல் என்பது இந்திரன், அங்கி, வருணன் , வாயு, குபேரன், ஆதித்தன், சந்திரன், யமன் ஆகியோர் எட்டு திசைக்கும் காவலாக இருப்பதாகவும், இவர்களைத் தாண்டி கணபதி, குமரன், வயிரவன், துர்க்கை என்கிற நால்வரோடு சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு காவல்கள் இருக்கின்றது என்கிறார்
 
நமக்குள் இருக்கும் ஆறு குடிகள் எனப்படுவது மெய், வாய், கண் ,மூக்கு ,செவி, மனம் என்பவற்றை குறிக்கிறது.
 
உடலைக் கண்கானிக்கும் எட்டு கன்னியர்களாக அனங்க குசுமை, அங்க மேகலை, அனங்க மதனை, அங்க மதனா, அனங்க ரேகை, அங்க வேகினி, அனங்க குசை, அங்க மாலினி என்பாரை குறிப்பிடுகிறார்.
 
இந்த உண்மைகளை அறிந்து இந்த் பஞ்சாக்கர எழுத்துக்களின் யோகத்தை முறையே பயன் படுத்துவோனுக்கு அழிவில்லை என்கிறார். இதன் படி நின்று ஒழுகினால் இறையருள் சித்திக்குமாம்.
 
நாளை இந்த வருடத்தின் கடைசி தினமாகையால், புதிய ஆண்டினை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் சித்தர்கள் அருளியதும், அனைவருக்கும் நன்மை பயக்க கூடியதுமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.
 
 
 
 
திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள

தினமும் காலையில் திருமந்திரத்தை பொருளுணர்ந்து வாசித்து வந்தால் குருவருள் சித்திக்குமென நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாடல்களின் பொருளறிவது தொடர்பாக நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். கீழே இருக்கும் இணைப்பில் திருமந்திர பாடல்களும், அவற்றின் பொருளும் எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
திருமந்திரம்
 
இந்த பதிவில் திருமந்திரத்தில் மறைபொருளாய் கூறப்பட்டுள்ள பஞ்சாக்கர எழுத்துக்களை பற்றி பார்ப்போம். பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர்நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.இந்த சூட்சும தகவல்கள் அனைத்துமே திருமூலரால் மறைபொருளாகவே கூறப்பட்டிருக்கின்றன.
 
திருவம்பல சக்கரம் குறித்து முன்னரே ஒரு பதிவில் விவரமும், அதன் படத்தினையும் பகிர்ந்திருக்கிறேன். இந்த இணைப்பில் சென்று அந்த பதிவினை வாசிக்கலாம்.இத்தகைய பெருமையுடைய பஞ்சாக்கர எழுத்துக்கள் ம்னித உடலை ஆட்கொண்டிருப்பதாகவும், இதனை உணர்ந்து தெளிந்து திருவம்பலசக்கரத்தினை பூசிப்பவர்களுக்கு அழியாத உடல் கிடைக்குமென்கிறார் திருமூலர்.
 
"ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திருக்கும்
ஆகின்ற ஐம்பத்தி ஓரெழுத்து உள்நிற்கப்
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே"
 
- திருமந்திரம் -
 
திருவம்பல்ச் சக்கரத்தின் மையத்தில் உள்ள இருபத்தியைந்து அறைகளினுள் இந்த ஐம்பத்தியோரு பஞ்சாக்கர எழுத்துக்கள் எழுத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்களில் இறைவனும் நெறிமுறையாக அமர்ந்திருப்பார் என்கிறார். இந்த எழுத்துக்களின் பெருமையை பார்ப்பதற்கு முன்னர் இந்த எழுத்துக்கள் எவையென தெரிந்து கொள்வோம்.
 
 
பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களான....
 
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள
 
ஆய்த எழுத்து கூடிய நிலையில் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டு...
 
ஃஅ,அஃ,ஃஇ,இஃ,ஃஉ,உஃ,ஃஎ,எஃ,ஃஐ,ஐஃ,ஃஒ,ஒஃ
 
மெய்யெழுத்து பதினெட்டு..
 
க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன
 
ஆய்த எழுத்து கூடிய நிலையில் மெய்யெழுத்து எட்டு..
 
ஃக,கஃ,ஃச,சஃ,ஃப,பஃ,ஃய,யஃ
 
ஆயுத எழுத்து ஒன்று
 

ஆக மொத்தம் ஐம்பத்திய்யோரு எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனிதனின் உடல் அவயங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறுகிறார்.அந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
 
இந்த வலைப் பதிவில் முன்னூற்றி ஐம்பதாவது பதிவு இது.


திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்
"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது!
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"
 
-திருமூலர்
 
சைவ சமய திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக போற்றப் படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திர வகையாகவும், பத்தாவது திருமுறையான திருமந்திரம் சாத்திர வகையாகவும், பதினோராவது திருமுறை பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது திருமுறை புராணவகையாகவும் குறிக்கப் பட்டிருக்கிறது. சாத்திரவகையான திருமந்திரம்தான் மெய்யான இறையின் தத்துவத்தையும், அதன் மேலான மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல் என்றால் மிகையில்லை.
 
என்னுடைய தனிப்பட்ட அவதானத்தில், அழியும் தன்மையுடைய நமது உடலை யோகத்தின் மூலம் பக்குவமாக்கி, சிற்றின்பங்களின் பிடியில் இருந்து விலகி, எல்லா உயிர்களிடத்தும் கபடமில்லாத அன்பு செலுத்துவதன் மூலம் நம் சீவனை சிவனாக்கி மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதன் நுட்பநிலைகளை விவரிக்கும் நூலாகவே திருமந்திரத்தை பார்க்கிறேன்.
 
இந்த நூலில் பொதிந்திருக்கும் பல அரிய தகவல்கள் இன்னமும் முழுமையாக கட்டவிழ்க்கப் படவில்லை. எளிய சொல்லாடல்களால் அமையப் பெற்ற இந்த பாடல்களின் பின்னே இருக்கும் சூட்சுமங்கள் சிலதை நானறிந்த வகையில் இந்த வாரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருமூலரின் வாக்கின் படி மூவாயிரம் பாடல்களால் ஆன இந்த நூல் நமக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது
 
முதலில் இந்த நூலின் அமைப்பு எத்தகையது என்பதை பார்ப்போம்.மொத்தமாக பத்து பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர். மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்” என்று அழைக்கப் படுகின்றன.
 
பாயிரம்
 
இதில் மொத்தம் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் உள்ளது. இந்த பாடல்கள் பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப் பட்டிருக்கிறது. அவை முறையே,.. கடவுள் வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, அவையடக்கம், அறஞ்செய்யான் திறம், அறஞ்செய்வான் திறம், ஆகமச் சிறப்பு, ஆகுதி வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை, வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் தன் வரலாறு கூறுதல் என பிரிக்கப் பட்டிருக்கிறது.
 
பதிவின் நீளம் கருதி திருமந்திர ரகசியத்தை நாளைய பதிவில் தொடர்கிறேன்..

No comments:

Post a Comment