அதி ஆபத்தான வர்ம முறைகள்..!
Labels: அகத்தியர், வர்மம்
வர்மக்கலையினை மனித சமூகத்தின் ஆக்கத்திற்கும் பயன் படுத்தலாம், அழிவிற்கும் பயன்படுத்திடலாம்.இதன் பொருட்டே இந்தக் கலை காலம் காலமாய் நம்பகமான சிலருக்கு மட்டுமே வழிவழியாய் பயிற்றுவிக்கப் பட்டு வந்தது. தகுதியானவர்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த தொடர் சங்கிலி அறுந்து போகும் .இப்படியாக பல அரிய விஷயங்களை நாம் இழந்துவிட்டோம் என்பது வேதனையான உண்மை. இன்றைக்கு நம்மிடையே எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்திட வாய்ப்புள்ள அனைவரும் முயற்சித்திட வேண்டும்.
சங்குதிரி கால வர்மம்
"சரளமான சங்கத்தின் ஒருவிரல் கடை
உள்தள்ளி நின்ற வர்மமடா
இதனில் தாக்கமது நிகழ்ந்தால்
ஓலமிட ஓசையது எழாது
எழாமலே இருவிழியது அந்தக்
காரமது சூழ்ந்து தெறித்து
இருமலது தோன்றி மயக்கமுமாகுமே"
- அகத்தியர் -
இந்த வர்மமானது குரல்வளையின் குரல் நாண் மடிப்பு உள்ள இடத்தில் அதாவது குரல் வளையின் நடுவில் கழுத்துச் சங்கின் இருபுரமும் உள்ளது. இந்த வர்மப் புள்ளியில் தாக்கப்பட்டால் குரல்வளையின் இருபுறமும் உள்ள வலது , இடது நாண்கள் சேதமடைந்து குரல்வளைக்குச் செல்லும் காற்றானது தனது இயல்பு அதிர்வுகளை ஏற்படுத்த முடியாது தடுக்கப் படும் இதனால் தாக்கப்பட்டவர்களால் உடனடியாகப் பேசமுடியாமல் போய் கண்கள் இருண்டு மயக்கமடைவார்கள்.
தட்சணக் கால வர்மம்...
"போகுமடா மைந்தா வெள்ளையது
உள்ளங்கையில் பொருந்திநின்ற
தட்சணைக் காலம் சொல்வேன்
ஆகுமடாஇந்தவர்மம் கொண்டால்கேளு
உயிரது பிரியும் நேரமாகும் புண்ணியனே
மாத்திரையது மீறிரைக்கால் மரணமாகும்"
- அகத்தியர் -
நமது உள்ளங்கையின் நடுவிலிருந்து சற்று மேலே விரல்களை நாபிப் பிடித்தால் ஆள்காட்டி விரலுக்கு அடுத்தவிரலான கட்டை விரல் எந்த இடத்தில் நிலைத்திருக்கின்றதோ அந்த இடமே தட்சணக் கால வர்மப் புள்ளியாகும். இந்த வர்மத்தில் முக்கால் மாத்திரையோ அல்லது முழு மாத்திரை அளவோ தாக்கப்படுமானால் தாக்குதலுக்கு உள்ளாபவர் மரணமடைவார்..இந்தத் தட்சணக் கால வர்மத் தாக்குதலை இனி இயலாது என்கிற இறுதிக்கட்டதிலேயே பயன்படுத்த வேண்டும்...
இந்த பதிவில் தரப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் தகவல் பகிர்வே, தயவு செய்து எவ்ற்றையும் பரிட்சித்து துன்பமடைய வேண்டாம். தக்க வாய்ப்பும், குருவருளும் கிடைக்கப் பெற்றவர்கள் கற்றறிந்து மனிதகுல மேன்மைக்கு பயன்படுத்திடுங்க்ள்.
அடுத்த பதிவில் உடலுக்கு நலமும்,பலமும் நல்கும் தேக முத்திரைகளைப் பற்றி பார்ப்போம்.
எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!
அகத்தியர், வர்மம்
தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.
தட வர்மம்
"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"
- அகத்தியர் -
நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால் முடியாது போய்விடும்.
முடக்கு வர்மம்
"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"
- அகத்தியர் -
இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.
நாளைய பதிவில் மேலும் அதி ஆபத்தான இரண்டு வர்ம முறைகளைப் பற்றி பார்ப்போம்.
முக்கிய வர்மங்கள்
Labels: அகத்தியர், வர்மம்
உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...
தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37
திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்
நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13
தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்
உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15
உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்
முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10
மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்
கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9
வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்
கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19
முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்
கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்
பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்
இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..
நாளைய பதிவில் வர்மங்கள் சிலவற்றை செய்திடும் முறையினை காண்போம்.
வர்மங்களின் வகைகள்..!
Labels: அகத்தியர், வர்மம்
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”
படுவர்மம்
நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.
தொடு வர்மம்
இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.
தட்டு வர்மம்
ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.
நோக்கு வர்மம்
பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.
இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...
தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
யார் வர்மம் பழகலாம்...!
Labels: அகத்தியர், வர்மம்
வர்மக் கலையினை குருமுகமாய் பயில்வதே சிறப்பு, நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் எல்லாமே ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கும். அவை ஒருபோதும் முழுமையான கல்வியாகாது. மரபு வழிசார்ந்த இந்த கலையில் அனுபவமும், விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சி மட்டுமே ஒருவனை வித்தகனாக ஆக்கும்.
வர்மக் கலையில் தேர்ந்த வைத்தியர்கள் மிகச் சிலரே நம்மிடையே இருக்கின்றனர். இவர்களும் பெரிதான அளவில் வெளியில் தெரியாமல் தங்களை நாடி வருவோருக்கு மட்டும் வைத்தியம் செய்திடும் இயல்பினர்.குருமுகமாக வித்தையை கைகொண்ட எவரும் விளமப்ர வெளிச்சத்திற்கு ஆசைப் படுவதில்லை. அகத்தியர் கூறியுள்ள தகுதியின் படி வர்மம் பழகிட சில அடிப்படையான குண இயல்புகளும், மனோ ரீதியான கட்டுப் பாடுகளும் தேவை.
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் நுண்ணறிவும், சேவை மனப்பாங்கும்,ஆகக் கூடிய நிதானமும், பதட்டமோ, கோபப் படும் தன்மை அற்றவனாக இருத்தலே அடிப்படை தகுதியாகும் என்கிறார் அகத்தியர்.மேலும் இத்தகையவர்கள் எதிரிகளை தாக்கும் நோக்குடன் கற்றுக் கொள்ளாமல் மக்களின் நோய் நொடிகளைக் குணப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு பயிலவேண்டும்.
இவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் தருணம் அன்றி வேறு எந்த நேரத்திலும் மற்றவர்கள் மீது இதை பிரயோகிக்காது இருத்தல் வேண்டும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கூட, எதிரியின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாதவண்ணம் எதிரியை தாக்கி வீழ்த்தவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
தேர்ந்த வர்மக் கலை நிபுனன் ஒருவன் எத்தகைய பலசாலியையும் ஒன்றிரண்டு தாக்குதலில் நிலை குலையவைத்து வீழ்த்திட் முடியும். குறிப்பிட்ட சில வர்ம புள்ளிகளை தாக்குவதன் மூலம், எதிரியின் மரண தினத்தைக் கூட நிர்ணயிக்க முடியும். அத்தகைய மரணம் மிகவும் கொடியதும், வலி மிகுந்ததுமாக இருக்குமாம்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த வர்மக் கலையினை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்திருக்கிறார். அவையாவன...
படு வர்மம்
தொடு வர்மம்
தட்டு வர்மம்
நோக்கு வர்மம்
இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இந்த வகைகளின் விளக்கங்களையும், அதன் பயன்களையும் நாளைய பதிவில் காண்போம்.
மருத்துவக் கலை!, மரணக் கலை!
Labels: அகத்தியர், வர்மம்
சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர் க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.
பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.
தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.
"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"
- அகத்தியர் -
வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய “ஒடிவுமுறிவுசாரி” என்ற் நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிற்து. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.
உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து.
நாளைய பதிவில் இந்த நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் வர்மம் பற்றிய மற்ற தகவல்களை பார்ப்போம்.
Wikipedia
Search results
Tuesday, 8 December 2015
Sithargal ulagam 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment