Wikipedia

Search results

Wednesday, 30 September 2015

Time travel

நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, “ பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் இன்னும் சாத்தியப்படவில்லை.

இப்போது அதே கேள்வியை
மீண்டும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம். ‘உண்மையிலேயே நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்றுவர முடியுமா?’ அதற்கு ‘முடியும்’ என்றுதான் பதில் சொல்கிறது அறிவியல். மறுக்கவே முடியாத கணிதச் சமன்பாடுகள் மூலம், காலப் பயணம் சாத்தியமே என்று நிறுவுகிறது அறிவியல். இறந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ நம்மால் பயணம் செய்ய முடியும் என்று அறிவியல் சொல்கின்றது என்றால், ‘நாம் ஏன் இன்னும் அந்தக் காலங்களுக்குப் பயணம் செய்யவில்லை?’ என்ற கேள்வியும் நமக்கு எழுவது இயல்புதானே! இன்றுவரை நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியவில்லையென்றால், அது சாத்தியமற்றது என்றுதானே அர்த்தமாகின்றது. நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடந்து முடிந்து, இறந்து போன காலத்துக்கு நம்மால் மீண்டும் செல்லலாம் என்று யாராவது சொல்லும்போது, நம்ப முடியாமல் நமக்குள் ஒரு கேலிச் சிரிப்பொன்றுதான் வெளிப்படும். நேற்றைக்கோ, முந்தா நேற்றைக்கோ நம்மால் மீண்டும் செல்லலாம் என்று சொன்னால் அதை எப்படி நம்பமுடியும்? இறந்துபோன மனிதரையும், இறந்துபோன காலத்தையும் எப்படி நாம் திரும்பிப் பார்க்க முடியும்? கனவிலோ, கற்பனையிலோ அது சாத்தியமாகலாம். நிஜத்தில் அது எப்படிச் சாத்தியமாகும்?

“இல்லை, நாம் நினைப்பது அனைத்தும் தவறு. அவையெல்லாம் சாத்தியம்தான்” என்று சொல்கிறது நவீன இயற்பியல். ‘காலம்’, ‘வெளி’ (Time, Space) ஆகிய இரண்டைப் பற்றியும் சரியாக நாம் புரிந்து கொள்ளாத வரையில், இவை சாத்தியமற்றவை என்றுதான் நினைத்துக் கொள்வோம். இவற்றைப் பற்றிப் புரிந்துகொண்டுவிட்டால், இவற்றின் சாத்தியங்களும் நமக்குப் புரிய ஆரம்பிக்கும். காலத்தினூடாகப் பிரயாணம் செய்வதற்கு நமக்குத் தேவையானது வேகம். சாதாரண வேகம் இல்லை, ஒளியின் வேகம். ஒளி அல்லது வெளிச்சம் எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ, அந்த வேகத்தை நாம் அடைய முடியுமானால், நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். நேற்று மாட்டு வண்டியில் ஊர்ந்து சென்ற நம் வேகம், படிப்படியாகக் கார், விமானம், ராக்கெட் என்று வேகத்தில் இன்று அதிகரித்து நிற்கிறது அல்லவா? அதுபோல, நாளை ஒளியின் வேகத்திலும் நாம் பயணம் செய்யும் வேளையும் வரும். அப்போது, காலத்தினூடாக நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகம் என்பது ரொம்ப அதிகமெல்லாம் கிடையாது. வெறும் 3 இலட்சம் கிலோமீட்டர் ஒரு செக்கனுக்கு. சரியாக வாசியுங்கள், ஒரு செக்கனுக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இதுவரை நம் அறிவின்படி, அதிக வேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். ஒளியை விட வேறு எந்தப் பொருளும் வேகமாகப் பயணிக்க முடியாது என்கிறது இன்றைய அறிவியல். ஒருவேளை ‘ஏதாவது ஒன்று’ ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், அல்லது அந்த ‘ஏதாவது ஒன்று’ நாமாக இருந்தால், நம்மால் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ய முடியும். “நடக்காத ஒன்றை, நடக்கும் என்று சொல்லி நம்மை ஏமாற்றப் பார்க்கிறது அறிவியல்” என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர்கள் நமக்கு முன்னே வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் திகைத்துப் போவீர்கள்.

உலகநாடுகளில் சில இணைந்து ‘விண்கப்பல்’ (The International Space Station-ISS) ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தன. விண்வெளியை ஆராய விரும்பும் நாடுகள், தங்கள் அஸ்ட்ராநாட்டுகளை அங்கு அனுப்பி, பல நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கும். அங்கு செல்பவர்கள் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் கூடத் தங்கியிருந்திருக்கிறார்கள். இந்த விண்கப்பல் கிட்டத்தட்ட 415 கிலோ மீட்டர் உயரத்தில், மணிக்கு 27600 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த ‘சேர்கை அவ்டேஜேவ்’ (Sergei Avdeyev) என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர், 747 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து தன் ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். அதாவது பூமிக்கு மேலே 747 நாட்கள், 27000 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். அவர் செய்த அதிவேகப் பிரயாணத்தின் மூலம், பூமியில் வசிக்கும் நம்மைவிட 0.02 செக்கன்கள்

posted from Bloggeroid

Sunday, 13 September 2015

ஆறாதபுண் குணமாக

ஆறாதபுண் குணமாக

author;மதன்


மருதாணி இலைகளை துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் காய்ந்தவுடன் அதில் இலைகளை போட்டு சடசடவென வெடித்தவுடன் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியபின் சுத்தமான அம்மியில் மைபோல் அரைத்து பின் தேவையான அளவு துணியில் பூசி, மருந்தை புண்ணின் மீதுப்படும்படி வைத்து கட்டு போட வேண்டும். இனது நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் புண் நன்றாக ஆறிவிடும்

posted from Bloggeroid

மஞ்சள் காமாலை குணமாக மஞ்சள் காமாலை குணமாக தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

மஞ்சள் காமாலை குணமாக
மஞ்சள் காமாலை குணமாக

author;மதன்


தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு, மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். அதேபோல் கரிசிலாங்கண்ணி இலைகளையும் அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

posted from Bloggeroid

சித்த மருத்துவ குறிப்புகள்

சித்த மருத்துவ குறிப்புகள்

Author;மதன்



1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உ¡¢ஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

2. இருமல் குணமாக: அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கா¢யானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீ¡¢ல் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம்: ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீ¡¢ல் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும்.

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அ¡¢த்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6. சளிகட்டு நீங்க: தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்தி¡¢ இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.

7. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசா¢ ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

8. தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

9. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

10. தலைப்பாரம் குறைய: நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

11. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டுக் கலக்கி கெண்டியை அடுப்பில் சூடேற்ற ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

12. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போட குணமாகும்.

13. கடுமையான தலைவலி: ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

14. சளித் தொல்லை நீங்க: ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

15. கபம் நீங்கி உடல் தேற: கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

16. காசம் இறைப்பு நீங்க: கா¢சலாங்கன்னி, அ¡¢சி, திப்பிலி பொடிய செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

17. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீ¡¢ல் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

18. தும்மல் நிற்க: தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்

19. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1/2 கரண்டி மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

20. காசநோய் குணமாக: செம்பருத்தி பூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்

posted from Bloggeroid

சித்த மருத்துவ குறிப்புகள் 1

சித்த மருத்துவ குறிப்புகள் 1
சித்த மருத்துவ குறிப்புகள் 1

(சித்த மருத்துவம்)


Author; மதன்

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்

posted from Bloggeroid

பதினெண் சித்தர்கள் பதினெண் சித்தர்கள்

பதினெண் சித்தர்கள்
பதினெண் சித்தர்கள்

Author: மதன்


தில்லையில் திருமூலர்,

அழகர் மலையில் இராமதேவர்,

அனந்த சயனத்தில் கும்ப முனி,

அருணையில் இடைக்காடர்,

வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,

எட்டுக்குடியில் வான்மீகர்,

மருதாசலத்தில் பாம்பாட்டி,

மாயுரத்தில் குதம்பை,

ஆருரில் கமல முனி,

பழநியில் போகர்,

பரன்குன்றில் குதம்பை,

திருப்பதியில் கொங்கணர்,

இராமேசுரத்தில் பதஞ்சலி,

காசியில் நந்தி,

கருவூரில் காங்கேயர்,

பொய்யூரில் கோரக்கர்,

சோதிரங்கத்தில் சட்டமுனி,

மதுரையில் சுந்தரானந்த தேவர் 60 எனப் பதினெண்மர் சித்தரெனக் குறிப்பிடப்படுகிற

posted from Bloggeroid

சித்தர்கள் பற்றிய தகவல்கள் - அட்டமகா சித்துக்கள்

சித்தர்கள் பற்றிய தகவல்கள் - அட்டமகா சித்துக்கள்
சித்தர்கள் பற்றிய தகவல்கள் - அட்டமகா சித்துக்கள்

Author; மதன்


சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகலை அடைய வேண்டும் என்றும் அறிவுறிதினர் அவைகளின் பெயரும் அதன் அர்த்தமும்

1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது


3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை (புற இன்பங்களை) தவிற்க்க வேண்டும்

posted from Bloggeroid

பேதியை நிறுத்த பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த
பேதியை நிறுத்த

Author : மதன்

பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து.  வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும்.  மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும். 

வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது.  இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது

posted from Bloggeroid

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க
Author;மதன்


முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.  பேன் நீங்கும். 

முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு.  அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.

நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.  ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்

posted from Bloggeroid

சித்த மருத்துவ - குறிப்புகள் மேகரோகம் குணமாக

சித்த மருத்துவ - குறிப்புகள்
மேகரோகம் குணமாக
Author; மதன்


ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

இரத்த பேதியை குணப்படுத்த

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.

மூட்டுவலி குணமாக

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

ஆண்மை குறைவு நீங்க

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்

posted from Bloggeroid

டைம் டிரவல் ( கால பயணம் )

டைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்!!
Author. மதன்
டைம் டிரவல் ( கால பயணம் ) எனும் விடயம் எல்லோரும் தலையை பித்துக்கொள்ளும் விடயம் பலருக்கும் இன்னும் தெளிவில்லை. பலருக்கு இன்னும் இப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது . இறைவன் காலத்தை கடந்தவன் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் . எம்மாலும் கடக்க முடியும்.
இறந்த காலத்துக்கு செல்ல முடிந்தால் நாம் இழந்தவற்றை செய்யலாம். பிரபலமானவர்களை பார்க்கலாம் .நாம் தவறவிட்ட யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் . உதாரனத்திட்க்கு நியூட்டனை சந்திக்கலாம் , ராஜ ராஜ சோழனை சந்திக்கலாம். எதிர் காலத்துக்கு சென்று நம் உலகை கவனிக்கலாம்.
காலத்துக்கு விளக்கம் கேட்டால் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது . காலம் என்பது மிக மிக விளங்குவதற்கு கடினமான விடயம் . முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் . நேரத்தை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது . ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும் . எமக்கு வயதாகிறது , மரங்கள் வளருகின்றன போன்றவற்றின் மூலம் காலம் என்ற ஒன்று எம்முடன் நகருவதை நாம் உணரலாம் . நீங்கள் இப்போது மவுசை வைத்து கிளிக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அந்த ஒவ்வொரு நொடியும் இமைக்கும் பொழுதில் கடக்கிறது . கடக்கும் நிமிடங்களை நிறுத்த முடியாது . ஆனால் அதை நாம் உணருகிறோம் . ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்திற்க்கு செல்கிறோம் .
இன்னும் விரிவாக விளக்க வேண்டுமானால் , நாம் காரில் பயணிக்கும் போது நேர் பாதையில்(நீளம் ) பயணிக்கிறோம் , வளை பாதையில்(அகலம் ) பயணிக்கிறோம் . அதே ஒரு உயரமான மலை பாதையில் வளைந்து வளைந்து ஏறுகிறோம்( உயரம் + நீளம்+அகலம் ) . மூன்று பரிமாணங்கள் உண்டு . நான்காவது பரிமாணம் தான் நேரம். அதாவது நாம் பயணம் செய்யும் காரின் காலத்தை அளவிடலாம் (அதுவும் ஒரு அளவுகோல் தானே ) . அப்படியானால் கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகியது தான் நேரம் . இன்னும் எவளவோ பரிமாணங்கள் இருக்கின்றன.
அதாவது இரு நேரங்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது . அவை இரண்டையும் தொடர்பு படுத்துகிறது தான் நேரம் .
இறந்த காலத்துக்கு கொண்டு செல்லும் டைம் டிரவல் இயந்திரம் மிகவும் சக்த்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும் . ஒவ்வொரு குகைக்குள்ளும் செல்வது போல அமைய வேண்டும் என்பது ஒரு ஊகம் .
இது சாத்தியம் என்பது ஐங்ஸ்டெயின் ரிலேடிவிட்டி தியரி சொல்கிறது( E =MC ^2 ). அதாவது ஒளியின் வேகத்தில்(3 *10 ^8 ms) சென்றால் நாம் இறந்த காலத்துக்கோ நிகழ் காலத்துக்கோ செல்லலாம் என்பது அந்த தியரி .
இயற்கையில் எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் எம்மால் போக முடியுமா?
ஒரே பதில் வார்ம்ஹோலேஸ்(வார்ம்ஹோலஸ்) என்பது பவுதீகவியலாலரின் கருத்து .
ஒவ்வொரு தேடல்களுக்கும் இயற்கையில் நாம் காணும் விடயங்களில் இருந்து விடை கிடைக்கும் . அதே போல நாம் காணும் சடப்பொருட்கள் . உதாரணமாக பூல் விளையாட்டு பார்த்திருப்பீர்கள் . பந்து மிகவும் வழுக்கும் தன்மை உடையது. விளையாடும் மேசையும் மிக மிக தட்டை. ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பந்திலும் நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள் மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது.
ஆனால் இது நான்காவது பரிணாமமான நேரத்திலும் காணப்படுகிறது . அணுவை விட மிக மிக சிறிய இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது .அளவிட மிக சிறியது . மிக மிக சிறிய இடைவெளிகள், விரைவான குறுக்கு பாதை , இரு வேறு நேரத்தையும் இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன . மில்லியன் ட்ரில்லியன் சென்டி மீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்புக்கு இருக்கலாம் . மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படுகிறது .
டைம் டிரவல் இயந்திரம் செய்ய வேண்டிய வேலை என்ன ?
இந்த துளைகள் மனிதனால் செல்ல முடியாதவை . பவுதீக விஞ்ஞானிகள் முயற்ச்சி அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கினால் அதனுள் மனிதனை செலுத்தலாம் என்பதே. அதற்க்கான முயற்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது . மனிதனை செலுத்த முடியா விட்டாலும் செயற்க்கை கோளை விண் வெளியில் வைத்தே இவ்வாறு டைம் இயந்திரம் மூலம் எதிர் காலத்திட்ட்க்கு கொண்டு செல்லலாம

posted from Bloggeroid

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்
Author: மதன்
எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம்.  பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 

தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 

• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 

• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 

• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 

• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல – டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 

• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்

posted from Bloggeroid

மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்

மாரடைப்பை தடுக்கும் ஜாக்கிங்
Author: மதன்
தற்போது பலரும் ஜாக்கிங் எனப்படும் மெல்லோட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். மெல்லோட்டம் என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்துக்கும் இடைப்பட்ட சீரான தன்மை கொண்ட ஓட்டமாகும். 

உடலுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்று. இப்பயிற்சி மாரடைப்பை தடுக்க உதவியாக இருக்கிறது. பெரும்பான்மையான மருத்துவர்கள் கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக் கொள்வதற்காக தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றனர். மெல்லேட்டத்தின் பயன்கள் 

* நமது இதயம் சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, சாதாரண நிலையை விட மெல்லோட்டத்தின் போது அதிகமாகிறது. 

* ரத்தக்குழாய்களையும், ரத்த குழாய்களை சுற்றியுள்ள அமைப்புகளையும் மெல்லோட்டம் வலுவடையச்செய்கிறது. 

* ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை இது தடுக்கிறது. 

* அதிகரித்த ரத்த அழுத்த நிலையை குறைக்க துணைபுரிகிறது. 

* மெல்லோட்டத்தினால் இதயத்தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் ரத்தம் உறைவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது. 

* ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது. 

* மெல்லோட்டத்தினால் உடம்பின் கீழ்ப்பாகம், குறிப்பாக கால்கள் வலுவடைகின்றன. தொப்பை கரையும். 

* பெரும்பாலும் காலை வேளையில் மெல்லோட்டத்தில் ஈடுபடுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. தூய காற்றை சுவாசிப்பது, மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும். 

* வேகமான நடையைவிட மெல்லோட்டம் அதிக பயன்கள் அளிப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே சோம்பல்படாமல், அதிகாலையில் எழுந்து மெல்லோட்டத்தில் ஈடுபட ஆரம்பியுங்கள்

posted from Bloggeroid

டயமண்ட் புஷ் அப்

டயமண்ட் புஷ் அப்
| Author:மதன்
இந்த பயிற்சி புஷ் அப் செய்வதை போல் தான் செய்ய வேண்டும். புஷ் அப் பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் புஷ் அப் செய்ய போது இருக்கும் நிலையில் இருக்கவும். 

ஆனால் கைகளை நேராக வைக்காமல் படத்தில் உள்ளபடி கைகள் இரண்டும் ஒன்றைஒன்று பார்த்தபடி வைக்க வேண்டும். இந்த நிலையில் முன்னால் குனிந்து நிமிர வேண்டும். முடிந்த அளவு முன்னால் குனிந்தால் போதுமானது. ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய சற்று கடினமாக இருக்கும். 

ஆனால் கைகளுக்கு இந்த பயிற்சி நல்ல வலிமையைத்தரக்கூடியது. ஆரம்பத்தில் 20 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை 40 முறையும் அல்லது அதற்கு மேலும் செய்யலாம். எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அவ்வளவு பலன் விரைவில் கிடைக்கும்

posted from Bloggeroid

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்
Author:மதன்
ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப்பயிற்சி செல்வதோ, மாடியில் உடற்பயிற்சி செய்வதோ உற்சாகத்தை அளிக்காது. 

எனவே, குடும்ப உறுப்பினர்களையும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், நடைப்பயிற்சி கூட உற்சாகமாக இருக்கும். நடந்து செல்ல முடியாத தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது சைக்கிளில் செல்வது சிறந்த உடற்பயிற்சியாக அமையும். 

அலுவலகங்களில் உள்ள லிப்ட்டுகளைப் பயன்படுத்தாமல், ஒரு வேளையாவது படிகட்டுகளைப் பயன்படுத்தினால் வயிற்றில் விழும் அதிகப்படியான சதைப்பிடிப்பைக் குறைக்கலாம். 

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் உடற்பயிற்சி உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக உடல் எடை உடையவர்கள், உங்களது எடையில் எவ்வளவை குறைக்க விரும்புகிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதை நோக்கி உங்கள் உடற்பயிற்சியை முறைப்படுத்துங்கள். 

தொடர்ந்து 30 நிமிட நடைப்பயிற்சிதான் முழுமையான நடைப்பயிற்சியாக இருக்கும். அதற்குக் குறைவான நடைப்பயிற்சியால் உடலுக்கு எந்த பயனும் ஏற்படாது. உடற்பயிற்சி என்று தனியாக செய்ய விரும்பாதவர்கள், சைக்கிளிங், விளையாட்டு, நடனம் என்று தங்களை வேறு வகைகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம். 

நோய் இல்லா மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள்

posted from Bloggeroid

தொப்பை குறைய உதவும் கயிறு பயிற்சி

தொப்பை குறைய உதவும் கயிறு பயிற்சி
Author: மதன்
இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிமையாக பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி பேண்ட் மட்டும் இருந்தால் போதுமானது. பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுக்கவும். உடற்பயிற்சி பேண்ட்டை இடது காலின் பாதத்தில் (படம் Aயில் உள்ளபடி) மாட்டி ஒரு பக்கத்தை இடது கையால் பிடித்து கொள்ளவும். 

மற்றொரு முனையை வலது கையால் வயிற்றின் அருகில் பிடித்து கொள்ளவும். இப்போது உடற்பயிற்சி பேண்ட் ‘ V’ போன்ற வடிவத்தில் இருக்கும். வலது காலை முட்டி வரை மடக்கி வைக்கவும். இப்போது வயிற்று பக்கம் உள்ள வலது கையை அசைக்காமல் உடற்பயிற்சி பேண்ட்டை பிடித்துள்ள இடது காலை மெதுவாக படம் Bயில் உள்ளபடி இடுப்புக்கு நேராக நீட்டவும். 

காலை மடக்க கூடாது. சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இதே போல் இடது பக்கம் 20 முறை செய்யவும். பின்னர் கால்களை மாற்றி வலது காலுக்கும் செய்ய வேண்டும். கால்களை நீட்டும் போது நேராக வருவதற்கு உடற்பயிற்சி பேண்ட்டை சரிசெய்து கொள்ளலாம்.. 

ஆரம்பத்தில் 20 முறையும் அதன் பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும், அதற்கு மேலும் செய்யலாம். இந்த பயிற்சி தொப்பை குறைவதற்கும், கால்களுக்கு வலிமையும் தரக்கூடியதாகும்.

posted from Bloggeroid

தினமும் உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி
Author:மதன்
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயாளிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.

 பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

 இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

 உடற்பயிற்சியின் பயன்கள்.

 இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.

 அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.

இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.

ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும். நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது. இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதய நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.

posted from Bloggeroid

தோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி

தோள்பட்டை வலியை போக்கும் டம்ப்பெல்ஸ் பயிற்சி
Author: மதன்
இன்றைய தலைமுறையினரை அதிகளவில் பாதிப்பது தோள்பட்டை, முதுகு வலி பிரச்சனை. இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம், ஜிம்முக்கு சென்றும் செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவும். 

பின்னர் டம்ப்பெல்சை இரு கைகளிலும் பிடித்து கொள்ளவும். இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி டம்ப்பெல்சை தோள்பட்டை வரை தூக்கவும். பின் கீழே இறக்க வேண்டும். கைகள் நேராக இருக்க வேண்டும். வளைக்க கூடாது.   

இவ்வாறு ஆரம்பத்தில் 20 முறையும், படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறையும் அதற்கு மேலும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை நின்று கொண்டும் செய்யலாம். நின்ற நிலையில் இடுப்பு வரை முன்னால் குனிந்தபடி செய்ய வேண்டும். 

ஆரம்பத்தில் குறைந்த எடையுள்ள டம்ப்பெல்சை உபயோகிக்க வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும்

posted from Bloggeroid

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.

முதுகு வலிக்கு முத்தான உடனடி நிரந்தர தீர்வு , மருந்து தேவையில்லை எளிய பயிற்சி போதும் உடனடி நிவாரணம்.
Author: மதன்
8 மாதம் கழித்து இயற்கை உணவு உலகத்தின் அடுத்த படைப்பாக முதுகுவலிக்கு நிரந்தர தீர்வாக இருக்கப்போகும் இந்தப்படைப்பை உங்களுக்கு அளிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான முதுகு வலிக்கு உடனடித் தீர்வு அளிக்க கூடிய வகையில் நம் சித்தர்கள் பாடல் ஒன்று அறியப்பெற்றோம். பாடல் படித்து முடித்த பின் முதுகு வலிக்கு இப்படி ஒரு பயிற்சியா என்று ஆச்சர்யம் தான் மேலிட்டது.

இந்தப்பயிற்சி செய்ய எந்த ஆசிரியரும் ஒரு தேவையில்லை, இதற்கு என்று தனியாக நேரம் எல்லாம் ஓதுக்க வேண்டாம் நாம் தூங்கும் போதே செய்யலாம். இவ்வளவு மணி நேரம் தான் செய்ய வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. எந்த உபகரங்கணளும் தேவையில்லை. நாம் அறியப் பெற்ற பாடலை வைத்து படம் ஒன்று வரைந்தோம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. யாருக்காக இந்தப்பாடல் வருகிறது என்று பார்த்தால் அரசர்களுக்கும், அமைச்சர்களுக்கும் , கணக்கு வழக்கு பார்க்கும் நபர்களுக்கும் கூடவே உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நபர்களுக்காகவும் இந்தப் பயிற்சியை செய்ய சொல்லியுள்ளனர்.

சோதனை முயற்சியாக முதுகு வலி உள்ள கணினியில் வேலை செய்யும் இரண்டு நபர்களிடம் இந்தப்பயிற்சியை கூறி அவர்களிடம் 9 நாட்கள் கழித்து இதனால் பயன் ஏதும் இருக்கிறாது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கூறினோம். கூடவே ஒரு கண்டிசனும் போட்டோம்  கண்டிப்பாக 9 நாட்களும் தினமும் தவறாது இந்தப் பயிற்சி செய்ய வேண்டும் என்று. அவர்களும் அப்படியே 9 நாட்களும் செய்திருக்கின்றனர். 9 நாட்கள் முடிந்த பின் இரண்டு பேரும் நம்மிடம் தனித்தனியாக தொடர்பு கொண்டு முதுகுவலி சுத்தமாக இல்லை என்றும், சிறிய அளவு வலி கூட இப்போது முதுகில் இல்லை என்றும் கூறினர். விரைவில் அவர்களின் பேட்டி நம் தளத்தில் வெளிவரும், முதுகுவலி உள்ள நபர்கள் இமெயில் மூலம் இந்தப்பயிற்சி எப்படி செய்வது என்று கேட்டால் அவர்களுக்கு இமெயில் மூலம் பதில் அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

posted from Bloggeroid

உடலமைப்பிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்க

உடலமைப்பிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்க
Author:மதன்
விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள்…  இப்படி பல இடங்களில் ஆண், பெண் இருபாலரும் மிகவும் அதிகமாக, சிரமப்பட்டு உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். 

குறிப்பாக இளம்பெண்கள் தம் உடலை மிக ஒல்லியாக, அழகாக மாற்றும் எண்ணத்தோடு,  உணவைக் குறைத்து, வாரம் 7 நாட்களும், தினம் 2 – 3 மணி நேரம் ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீந்துதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் என அனைத்தையும் ஒரே மூச்சில் செய்கிறார்கள். 

இளைஞர்களோ 6 பேக் / 8 பேக் என தம் வயிற்றில் அடுக்கடுக்கான தசைப்பிடிப்புக் கட்டுகளை உண்டாக்க பளு தூக்கும் கூடமான ஜிம்மில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவுரை கேட்டு  செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது.

அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்

posted from Bloggeroid

ரெகுலர் பிளாங் பயிற்சிகள

ரெகுலர் பிளாங் பயிற்சிகள்
| Author: மதன்
ரெகுலர் பிளாங்க் பயிற்சியானது குறுக்கில் உள்ள வயிற்றுத்தசைகளை பலமடையச் செய்கின்றது. குறுக்கு வயிற்றுத்தசையானது வயிற்றில் உள்ள தசை மற்றும் நடுவயிறு ஆகியவற்றில் கீழ் உள்ள ஆழமான படலமாகும். ரெகுலர் பிளாங்க் எவ்வாறு செய்வது என பார்ப்போம். 

ஒரு நல்ல விரிப்பில் குப்புறபடுத்துக்கொண்டு கைகள் தோளுக்கு நேராக இருக்கட்டும். விரல்கள் நன்கு நேராக நீட்டப்பட்டு இருக்கட்டும். கால்களின் உள்ள விரல் பகுதியினை நன்றாக ஊன்றி உடலின் மேற்பகுதியை மட்டும் தூக்கி தோள்களின் பலத்தில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். 

கழுத்து முதுகெலும்பு போன்றவை நேராக இருத்தலும், வயிற்று தசைகளை சுருக்கிவைத்தலும் கவனத்தில் கொள்ளல் அவசியம். இவ்வாறு இந்த பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக அதிகரித்து கொள்ள வேண்டும்.இந்த பயிற்சி செய்வதால் கால்களும், கை தசைகளும் நன்கு வலிமை அடைகின்றன

posted from Bloggeroid

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்
Author: மதன்
தொந்தி பெரிதாக உள்ளவர்களும் இப்பயிற்சியை ஈஸியாக செய்யலாம் அதே சமயத்தில் தொந்தியை முழுமையாக குறைக்க உதவக்கூடியது. இப்பயிற்சி சரியாக வயிற்றை குறி வைத்து தேவையில்லாத கொழுப்பை குறைக்கும்.
இந்த பயிற்சியை செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1.முதலில் இந்த பயிற்சிகளின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.ஏனோ தானோ என்று செய்தால் பலன் கிடைக்காது.

2.விடா முயற்சியோடு பயிற்சிகளை மேற்க் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி சிலருக்கு உடனே பழகிக் கொள்ள முடியாது; கொஞ்ச கால தாமதம் ஆகும். அதற்காக மனம் தளரவோ,இது நமக்கு வராது என்று ஒதுக்கி விடவோ கூடாது.

3.தகுந்த சூழ்நிலை அவசியம் இயற்கை காற்றோட்ட வசதி வேண்டும் வீட்டில் ஜன்னலை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்

4.பயிற்சியின் போது மூக்கின் வழியாக மட்டுமே சுவாசிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்கக் கூடாது. மூச்சை உள்ளுக்கிழுத்தாலும் வெளியே விடுதலும் ஒரே சீராக மெதுவாக ,நிதானமாக நடைபெற வேண்டும்.

புதிதாகப் பயிற்சி செய்வோருக்கு

1.ஆரம்பத்தில் சில நாட்களுக்கு உடல்வலி இருக்கும். அதனை பெரிதுபடுத்தக் கூடாது.அதற்காக பயிற்சி செய்வதையே நிறுத்தி விடக்கூடாது.

2.பயிற்சிகளின் போது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம்
சாப்பிட்ட உடன் பயிற்சிகளை ஒரு போதும் செய்யக் கூடாது இந்த பயிற்சிக்கு வயிறு காலியாக இருக்க வேண்டும்.

3.பயிற்சி முடிந்த உடனேயும் உணவு உட்கொள்ளக் கூடாது. சுமார் 20நிமிட நேரம் கழிந்த பின்னரே முதலில் நீர் அருந்திவிட்டுப் பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும்.
4.பயிற்சிகளை அவசரமாகவும் படபடப்போடும், முரட்டுத்தனமாகவும் செய்யக்கூடாது. பயிற்சிகளை நிதானமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒன்றும் சர்க்கஸ் வித்தை செய்து காண்பிக்கப் போவதில்லை.

5.ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை பழகிக் கொள்ளவேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தையும்,எண்ணிக்கையையும் கூட்டிக் கொண்டே வரவேண்டும்

posted from Bloggeroid

தினமும் 20 நிமிட உடற்பயிற்சி

தினமும் 20 நிமிட உடற்பயிற்சி
| Author: மதன்
தினமும் 20 நிமிடம் சீரான உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திர்க்கு நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இறப்பை ஏற்படுத்தும் காரணிகள் 14 சதவிதம் குறைகின்றன. 

தினமும் 30-லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை, ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி என்று செய்வதைவிட 20 நிமிட சீரான உடற்பயிற்சியே சிறந்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் 20 நிமிட உடற்பயிற்சி போதுமானது என்று உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியுள்ளது. 

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு 10 சதவிதம் குறைவு. கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து 4 லட்சத்து 16 ஆயிரம் பேர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆண், பெண், இளம் வயதினர், முதியவர்கள், உடற்பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்த இவர்களின் உடல் நிலை ஆண்டிற்கு ஒருமுறை பரிசோதிக்கப்பட்டது. 

20 நிமிட உடற்பயிற்சி நமக்கு போனஸ் வயது தரும்போது நாம் ஏன் செய்யகூடாது

posted from Bloggeroid

மூன்றே வாரத்தில் எடையை குறைக்கும் ஒர்க்-அவுட்கள்

மூன்றே வாரத்தில் எடையை குறைக்கும் ஒர்க்-அவுட்கள்
Author: மதன்
நீங்கள் உடலின் அதிகமான கலோரிகளை எரிக்க விரும்பினால், அதற்கு கடுமையான பயிற்சியுடன் கூடிய, உணவுக் கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும். 

இந்த பயிற்சிகளை 3 வாரங்களுக்குப் பின்பற்றி வந்தால், உங்களுக்கு ஆச்சரியப்படச் செய்யும் பலன்கள் கிடைக்கும். இந்த எடை குறைப்புப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நீங்கள் முதலில் கணித்ததை விட நல்ல பலன்கள் கிடைத்து எடை குறையும்.எவ்வாறு மூன்றே வாரத்தில் எடையைக் குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்… 

• எடை குறைப்புக்கான சிறந்த ஒர்க்-அவுட்களை செய்யும் போது, நீங்கள் செய்யும் வார்ம் அப் பயிற்சி, உடலின் குறிப்பிட்ட தசைகளை இயங்கச் செய்யும். தடையற்ற வகையில் புஜங்களை சுழற்றவும், கைகளை அசைக்கவும் மற்றும் மூட்டு இணைப்புகளை இயக்கவும் வார்ம்-அப் அவசியம். முதலில் இந்த வார்ம் அப் பயிற்சி செய்யாமல் மற்ற பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்க கூடாது.
• ஹிட்ஸ், பொதுவாகவே ஓட்டம் தான் 3 வாரங்களில் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளில் மிகச்சிறந்த வழிமுறை என்பார்கள். 100 மீட்டர் ஹிட்ஸ்களை 10 முறை திரும்பத் திரும்பச் செய்யுங்கள். ஒரு ஹிட்ஸிலிருந்து மற்றொன்றை தொடங்கும் முன்னர் குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். முதல் வாரத்தில் ஒவ்வொரு ஹிட்ஸ்-க்கும் இடையில் நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை. எடை குறைப்புக்கான பயற்சிகளில் ஹிட்ஸ் சிறந்த பயிற்சி என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை.

• ஹிட்ஸ் பயிற்சிக்குப் பின்னர் நீங்கள் புஷ்-அப் செய்யலாம். மார்புப் பகுதியிலுள்ள கொழுப்புகளை எரிக்க விரும்பினால், கால்களை தூக்கி வைத்தவாறு பயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய மார்பக தசைகளில் இறுக்கங்கள் ஏற்படும். 3-வது வாரத்தில், ஒவ்வொரு ஹிட்ஸ் பயிற்சிக்குப் பிறகும், குறைந்தது 6-7 தடவைகள் புஷ்-அப் பயிற்சிகளை செய்து வரவும்.

• ஹிட்ஸ் மற்றும் புஷ்-அப் பயிற்சிகளை நீங்கள் செய்து முடித்தவுடன், ஸ்பாட் ரன்னிங் பயிற்சியை தொடங்கவும். உயரமான அளவிற்கு முழங்காலை செயல்படுத்தினால் மட்டுமே ஸ்பாட் ரன்னிங் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

• ஹிட்ஸ் பயிற்சிக்கு முன்னர் அல்லது பின்னர் என எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியை அடிப்படையாகவே எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். 2 நிமிட நேரத்திற்கு, 3 அல்லது 4 முறைகளுக்கு ஸ்கிப்பிங் பயிற்சியை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்.

• நீங்கள் செய்யும் பயிற்சிகளின் நிறைவாக ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை செய்தால் மட்டுமே மற்ற பயிற்சிகளின் பலன் முழுமையாகக் கிடைக்கும். உடற்பயிற்சி பந்து கொண்டு பயிற்சி செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும்.

• ஸ்ட்ரெட்சிங் பயிற்சிக்குப் பிறகு நீச்சலடிக்கச் செல்லுங்கள். அது உங்களுடைய தசைகளை தளர்வடையச் செய்வதுடன், கலோரிகளையும் எரித்திடும்

posted from Bloggeroid

இந்த எளிய பயிற்சி செய்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறையும்

இந்த எளிய பயிற்சி செய்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறையும்
| Author:மதன்
உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம் செல்வார் கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.சிலரோ தினமும் காலையில் எழுந்தது ம் வாக்கிங், ஜாக்கிங் போன்ற வற்றையாவது தொட ர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். உடற்பயிற்சி கூடங்களுக் கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்பது இல் லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை பின் பற்றி உடற்பயிற்சி செய்து வந்தால் உங்கள் உடல் எடை படிப்படியாக குறைவதை காணலாம்.

அனைத்துவீடுகளிலும், அலுவலகத்திலும்மாடிகள்இருக்கும். அப்போதுமேலேசெல்வதற்கு, லிப்ட்டுகளைபயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின்மூலம்செல்லலாம். இதுவும்உடல்எடையைக்குறைப்பதற்கானஒருவழியானஉடற்பயிற்சிதான்.

தொப்பையைக்குறைப்பதற்குஒருசிறந்தஉடற்பயிற்சிஎன்றால்,முதலில்தரையில்படுத்துக்கொண்டு, கைகளைதலைக்குபின்னால்பிடித்துக்கொண்டு, மெதுவாகமுன்னால்எழவேண்டும். அப்போதுகால்களையும்முன்னோக்கிதூக்கவேண்டும். இவ்வாறுதொடர்ந்துசெய்தால், வயிற்றில்உள்ளதேவையற்றகொழுப்புக்கள்கரையும், உடல்எடையும்படிப்படியாககுறையும்.

வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கு ம் போது, 

தரையில்குப்புறபடுத்துக்கொண்டு, கைகள்இரண்டையும்தரையில்பதித்து , கால்கட்டைவிரல்கள்இரண்டையும்தரையில்ஊன்றிபோலன்ஸ்செய்துஉடலைமேலேதூக்கிக்கொண்டு, பின்மெதுவாகமுன்புறமாகமூக்குதரையில்தொட்டுபடிகுனிந்து, பின்மீண்டும்உடலேமேலேதூக்கவேண்டும். இவ்வாறுதொடர்ந்துசெய்துவந்தால், கைகள்மற்றும்மார்புகள்நன்குவலிமைபெறும்..

- ஜாக்கிங்என்றுசொன்னதும்வெளியேதான்செல்லவேண்டும்அல்லதுஉடற்பயிற்சிஇயந்திரங்கள்மூலம்தான்செய்யவேண்டும்என்பதில்லை. வீட்டில்டிவிபார்த்துக்கொண்டே, ஒரேஇடத்தில்நின்றுகொண்டேஜாக்கிங்செய்யலாம்.

-இதுவும்ஒருசிறுவயதுவிளையாட்டுதான். இதற்குவெறும்கயிறுமட்டும்போதுமானது. ஆகவேவீட்டில்ஸ்கிப்பிங்கயிறுஇருந்தால், அதனைநேரம்கிடைக்கும்போது, தோட்டம்அல்லதுமாடியில்விளையாடலாம்.

- டேபிள்அல்லதுகட்டிலில்கைகளைஊற்றி, முன்னும்பின்னும்எழவேண்டும். மற்றொன்று, கால்களைடேபிளின்மேல்வைத்துக்கொண்டு, கைகளைதரையில்வைத்துக்கொண்டு, மேலும்கீழம்எழவேண்டும். இவ்வாறுசிறுபயிற்சிகளைசெய்துவந்தால்உடல்எடைபடிப்படியாககுறைவதைகாணலாம்.
 



posted from Bloggeroid

நீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்

நீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்
| Author: மதன்
உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில் அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியும். 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் – தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்… 

நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும். 

முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.  மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல… எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்

posted from Bloggeroid

குறைந்த நேர உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்

குறைந்த நேர உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்
| Author:மதன்
உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரித்து தசைகளை வலுவுறச் செய்வதில் சிறந்து செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. 

நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட முடியாத நாட்களில், உங்களுக்கு பயனை அளிக்கும் 15 நிமிட தீவிரமான இடைவெளி பயிற்சியில் கூட ஈடுபடலாம். ட்ரெட்மில், குந்துகைகள், லங்ஸ் மற்றும் பர்பீஸ் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். உங்களுக்கு பிடிக்காத உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்தால் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படாது. 

நல்லதொரு வியர்வை சிந்தும் நேரத்தை செலவிட பல வழிகள் உள்ளது. அதனால் உங்களுக்கு பிடித்தவைகளை தேர்ந்தெடுங்கள். அவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அவைகளைப் பற்றி கற்றுக்கொண்டு அதனை அனுபவிக்க தொடங்குங்கள். ஸூம்பா வகுப்பு, ஸ்பின் வகுப்பு, குத்துச்சண்டை போன்றவைகளை முயற்சி செய்து பார்க்கலாம். 

நீங்கள் செய்வதை விரும்பி செய்தால், அதனை தொடர்ந்து செய்வீர்கள். அதனால் அதிக பயனையும் பெறுவீர்கள். தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துககொண்டு டி.வி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும். வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம். நம் உடல் ஆரோக்கியமாக இருக்க எளியவகை உடற்பயிற்சிகளை மட்டும் செய்தாலேபோதும்

posted from Bloggeroid

உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்

உடற்பயிற்சியின் 5 முக்கிய அம்சங்கள்
Author: மதன்

குறிப்பாக இளம்பெண்கள் தம் உடலை மிக ஒல்லியாக, அழகாக மாற்றும் எண்ணத்தோடு,  உணவைக் குறைத்து, வாரம் 7 நாட்களும், தினம் 2 – 3 மணி நேரம் ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், நடைப்பயிற்சி, ஓட்டம், நீந்துதல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் என அனைத்தையும் ஒரே மூச்சில் செய்கிறார்கள். இளைஞர்களோ 6 பேக் / 8 பேக் என தம் வயிற்றில் அடுக்கடுக்கான தசைப்பிடிப்புக் கட்டுகளை உண்டாக்க பளு தூக்கும் கூடமான ஜிம்மில் நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப, அவர்களின் தினசரி வாழ்க்கை முறை, வீட்டு, அலுவலக வேலைத்திறன், வயிறு, உடலில் உள்ள ஆரோக்கியக் குறைவு என அனைத்தையும் மனதில் கொண்டே உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல பயிற்சியாளர்களிடம் அறிவுரை கேட்டு  செய்வது மிகவும் அவசியம். ஒரே நாளில் யாருமே அதிக உடற்பயிற்சி செய்வதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற்றுவிட முடியாது. அதிகமாக உடலை வருத்துவதால் மூட்டுவலி, மயக்கம், வலிமைக் குறைவு, தசை வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் இணையும் அனைத்துப் பகுதிகளிலும் வேதனை என பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். 

உடற்பயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்

உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்தாலும் மிகவும் அதிக முறை செய்யும்போதுதான் பிரச்னைகள் உண்டாகின்றன. நல் ஆரோக்கியத்தையும் நல்ல உடல்வாகையும் மேனி அழகையும் உறுதியான இதயத்தையும் பெற, அனைத்து உடல் உறுப்புகளும் சீராகச் செயல்பட, சில விதிமுறைகளை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, ஓட்டம், பளு தூக்குதல், விளையாட்டுப் பயிற்சிகள் என எதுவாயினும், முதலில் சிறியதாகத் தொடங்கி, உடல் மற்றும் மனம் உறுதிபட தொடங்கியவுடன், கொஞ்சம் கொஞ்சமாக  அடுத்த பகுதிக்கு முன்னேற வேண்டும். அப்போதுதான் இதய-நுரையீரல்களின் உறுதி, தசை மண்டலங்களின் உறுதி, எலும்பு மற்றும் எலும்பு இணைப்பில் உறுதி ஆகியவை கிட்டும். 

உடற்பயிற்சியில் உறுதி செய்யப்பட வேண்டிய 5 முக்கிய பாகங்கள்

சீரான நல்ல ரத்த ஓட்டம் உடலுக்கும்  இதயத்துக்கும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதிக அளவு ஆக்ஸிஜன் பெற நம் நுரையீரல்கள் விரிவடைந்து, உறுதிப்பட வேண்டும். அதற்கான சிறப்பு பயிற்சிகளை இதயம்-நுரையீரல்கள் உறுதி செய்யுமாறு செய்ய வேண்டும் (Cardiorespiratory Endurance).
 
நம் உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் உறுதிபடச் செய்ய, அந்தந்த தசைப்பகுதிகளுக்கு அளவான பளுக்களை தேர்வு செய்து அந்த தசைகளின் தன்மைக்கேற்ப, ஒருநாள் உடலின் மேல் உறுப்பு தசைகளுக்கும், அடுத்த நாள் கீழ் உறுப்பு தசைகளுக்கும் மாறி மாறி பளு தூக்கும் பயிற்சி அவசியம் (Muscular Strength).
 
மெது நடைப்பயிற்சி, வேக நடைப்பயிற்சி, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என அடுத்தடுத்து முன்னேற்றம் காண வேண்டும். இதனால் உடலின் முழுத் தசை மண்டலங்களும் உறுதிப்படுவதோடு, நிறைய ஆக்ஸிஜன் பெற்று, நல்ல ரத்த ஓட்டம் அடைந்து, நீங்கள் களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம் (Muscular Endurance).

அளவான உடற்பயிற்சி, சீரான நடை / ஓட்டம், தேவையான பளு தூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக்ஸ், நீந்துதல், பரத நாட்டியம், கதகளி, குச்சுப்பிடி, மேலை நாட்டு ஆட்டக்கலைகள் என இவை அனைத்துமே உடலை நன்றாக வளைந்து கொடுக்கும் (High Level Range of Motion) திறமையை அதிகரிக்கும்.

தேவையில்லாத கொழுப்புதான் நம் உடலைக் கெடுக்கும் முதல் எதிரி. ஒவ்வொரு நாளும் நம் உடலில் தேவைக்கு அதிகமாக உள்ள கொழுப்பு சக்தியை எரித்துவிட வேண்டும் (Burn unwanted Excess Calories). இதற்காக நீங்கள் தினமும் செய்துவரும் உடற்பயிற்சியின் பல தரங்கள், வகைகளை வேகமாக (Intensity)   செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலே கூறிய அனைத்துப் பயிற்சிகளையும் 20 முதல் 60 வினாடிகள்… முடிந்தால் சற்று கூடுதலாக – சிறிது சிறிதாக வயதுக்கு ஏற்றவாறு கூட்டுவது (Volume)   கொழுப்புச் சக்திகளை எரிக்க மிகவும் ஏற்றது. ஏரோபிக்ஸ் பயிற்சிகள் இதில் முதலிடம் பெறுகின்றன. இதன் காரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்பு, தசைகள், உறுதியான எலும்புகள், அதன் சக்தியான இணைப்புகள் பெற்று அழகான, பேரின்ப உடல் வாகை நாம் பெறுகிறோம் (Body Composition)

posted from Bloggeroid

ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா?

ஸ்கிப்பிங் செய்தால் எடை குறையுமா?
Author: மதன்
ஸ்கிப்பிங் செய்வதால் எடை குறையும் என்பதில் சந்தேகமில்லை. திருமணமாகாத, குழந்தை பெறாத பெண்கள் ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பப்பை  இறக்கம் வர வாய்ப்பில்லை. ஆனால் குழந்தை பெற்ற பெண்கள், ஒன்றுக்கு மேலான குழந்தை பெற்றவர்கள் ஆகியோருக்கு கர்ப்பப்பையையும்,  இடுப்பெலும்புக் கட்டை யையும் இணைக்கிற தசைகள் ஏற்கனவே தளர்ந்து, பலவீனமாகியிருக்கும். அவர்கள் ஸ்கிப்பிங் செய்தால், அந்தத் தசைகள்  மேலும் தளர்ந்து, கர்ப்பப் பை இறங்கும் வாய்ப்புகள் அதிகம். மற்ற பெண்களும் மிதமாகவே இந்தப் பயிற்சியைச் செய்வது நல்லது. 

மாதவிலக்கு நாட்களில் ஸ்கிப்பிங் என்றில்லை, எந்தவிதமான உடற்பயிற்சியையுமே செய்யாமலிருப்பதுதான் சிறந்தது. அந்த நாட்களில் ஏற்கனவே  உடல் களைத்துப் போயிருக்கும். உடற்பயிற்சிகள் அந்தக் களைப்பை இன்னும் அதிகரிக்கும். உடலை வருத்தும் பயிற்சிகளைத் தவிர்த்து, மூச்சுப்  பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம்

posted from Bloggeroid

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்|

எடை தூக்கும் பயிற்சியில் உள்ள நன்மை, தீமைகள்| Author:மதன்
எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம்.  பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. 

தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. எடை தூக்கும் பயிற்சியின் நன்மை தீமைகளை பார்க்கலாம். 

• ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும். 

• நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். 

• தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும். 

ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும். 

• பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல – டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும். 

• பளு தூக்கும் போது தவறி போட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்

posted from Bloggeroid

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி

நடைப்பயிற்சிக்கு முன்பும் – பின்பும் செய்யக்கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி
Author மதன்
சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில் ஈடுபடும் முன்னரும், பின்னரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம்.  

‘உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் (Warm Up), ஸ்ட்ரெச்சிங் (Stretching)பயிற்சிகளையும்… உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை – கால் தசைகளில், மூட்டுகளில்… இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும். 

ஜிம்முக்குச் சென்றால்தான் இதுபோன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும், சாதாரணமான நடைப்பயிற்சிக்கு தேவை இல்லை எனச் சிலர்  நினைப்பது தவறு. நடைப்பயிற்சியும் ஒருவிதமான உடற்பயிற்சிதான். எனவே, எல்லோருக்கும் இந்தப் பயிற்சிகள் அவசியம்! ”வார்ம் அப் என்பது நடைப் பயிற்சிக்காக உடலை ஆயத்தப்படுத்தும் ஒரு செயல். 

முதல் ஐந்து நிமிடங்கள் மெதுவாக நடக்க வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் சுறுசுறுப்பான நடைப் பயிற்சியைத் தொடங்கலாம். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்க் வாக்கிங்’ (Brisk Walking)   என்பார்கள். 30 முதல் 40 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடந்த பின்னர், படிப்படியாக வேகத்தைக் குறைத்து 5 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க வேண்டும். 

இதை ‘கூல் டவுன்’ என்பர். பின்னர் மீண்டும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்ய வேண்டும். வார்ம் அப் என்பது எப்படி இதயத் துடிப்பை, ரத்த ஓட்டத்தை, உடலின் வெப்பநிலையை அதிகப்படுத்துகிறதோ, அதேபோல கூல் டவுன் என்பது அவற்றைக் குறைத்து நார்மல் நிலைக்குக் கொண்டு வரும். 

அதிகாலை நேரத்தில்தான் பலரும் நடைப்பயிற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் சுற்றுச் சூழலும் நம் உடலும்  குளிர்ச்சியாக இருக்கும். அப்போது நடைப்பயிற்சி செய்யும்போது காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்து தசைகளின் வெப்பநிலையை அதிகரித்துக்கொண்டால், தசைகளுக்கு ஒருவித நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். 

இதனால் தசைகள் நன்றாகச் சுருங்கி விரியும். மூட்டுகளை எளிதாக நீட்டி மடக்க முடியும். சாதாரணமாக உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகளில் லாக்டிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம் தசைகளில் படிவதால், முழங்காலில் வலி, வீக்கம், கால் வலி, சோர்வு ஏற்படும். 

ஆனால், வார்ம் அப் செய்த பிறகு நடைப்பயிற்சி செய்தால் அமிலத்தின் சுரப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அப்படிக் குறைவாகச் சுரப்பதும்கூட நடைப்பயிற்சிக்குப் பின்னர் செய்யப்படும் கூல் டவுன் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளால் சுத்தமாகத் தடைபட்டுவிடும். எனவே, வலி வருவதற்கு வாய்ப்பே இல்லை. 

நடைப்பயிற்சி செய்வதற்கு முன்பும் – பின்பும் செய்யக் கூடிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சி முறைகள் ஒரேவிதமானவைதான். ஆனால், நடைப் பயிற்சிக்கு முன் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 10 நொடிகள் செய்ய வேண்டும். நடைப் பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 30 நொடிகள் செய்ய வேண்டும், அவ்வளவுதான். 

ஒவ்வொரு பயிற்சியையும் மூன்று முறை செய்வது அவசியம். பயிற்சியின்போது முதுகு வளையாமல் இருக்க வேண்டும்.

posted from Bloggeroid

உடற்பயிற்சி என்றால் என்னவெல்லாம் செய்யலாம்

உடற்பயிற்சி என்றால் என்னவெல்லாம் செய்யலாம்
Author: மதன்
• தோட்டத்தில் செடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது என 30 முதல் 45 நிமிடங்கள். 

• வீட்டில் கூரை, ஜன்னல், கதவுகளை துடைப்பது, கழுவுவது என 45 முதல் 60 நிமிடங்கள். 

• காரை கழுவி, துடைத்து, மெருகேற்றுவது 45 முதல் 60 நிமிடங்கள். 

• ஐந்து மைல் தூரம் சைக்கிள் ஓட்டுவது – 45 நிமிடங்கள். 

• நண்பர்களோடு கைப்பந்து விளையாடுவது – 45 நிமிடங்கள். 

• குழந்தைகளோடு கால்பந்து விளையாடுவது – 30 முதல் 45 நிமிடங்கள்.

• கூடைப்பந்து மைதானத்தில் தொடர்ச்சியாக கூடையில் பந்தை போடுவது – 30 நிமிடங்கள். 

• பிடித்த பாடல்களுக்கு நடனம், மேலைநாட்டு நடனம், பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் என ஏதேனும் நடன வகைகள் – 30 நிமிடங்கள். 

• 3 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் நடப்பது. 20 நிமிடங்கள் நீந்துதல். 

• வீட்டைச் சுற்றி விழுந்து கிடக்கும் இலை, தழைகளை கூட்டி சுத்தப்படுத்துவது – 30 நிமிடங்கள். 

• குடும்பத்தினரோடு இறகுப்பந்து விளையாடுவது – 45 நிமிடங்கள். 

• மாடிப்படிகளில் ஏறி இறங்குவது – 20 நிமிடங்கள். ஸ்கிப்பிங் – 15 நிமிடங்கள். 

• மெது ஓட்டம் – 3 கிலோ மீட்டர் தூரம் – 20 முதல் 30 நிமிடங்கள்

posted from Bloggeroid

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி

வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் பயிற்சி
Author: மதன்
வயிற்று சதை குறைய பல உடற்பயிற்சி சாதனங்கள் இருந்தாலும் இது விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இதை வீட்டில் வாங்கி வைத்தும் செய்யலாம். ஆனால் ஆரம்பிக்கும் முன் நிபுணரின் அறிவுரையின் படி மட்டுமே தொடங்க வேண்டும். 

அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 

1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5 தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம்

posted from Bloggeroid

உடற்பயிற்சியை தீவிரமாக செய்ய வேண்டுமா?

உடற்பயிற்சியை தீவிரமாக செய்ய வேண்டுமா?
Author: மதன்
6 மாதங்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரே வகையான பயிற்சியில் நீங்கள் ஈடுபட்டு வந்தால், அவ்வகை பயிற்சிகளுக்கு ஏற்ப உங்கள் தசைகள் பழகிக் கொள்ளும். எனவே தினமும் ஒரே வகையான பயிற்சியை 4-6 வாரங்களுக்கு தினமும் செய்திடுங்கள். அதன் பின் வேறு ஒரு பயிற்சிக்கு மாறுங்கள். உடற்பயிற்சி செய்யும் எண்ணிக்கை, உடற்பயிற்சி வகை, அல்லது பயன்படுத்தும் எடையின் வகை என எதை வேண்டுமானாலும் மாற்றுங்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது தீவிரமாக செய்ய வேண்டும். இதனால் பயிற்சியை முடிக்கும் போது மிச்ச மீதி ஆற்றல் திறன் என எதுவும் இருக்க கூடாது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது 80-100% தீவிரத்தை அதில் காட்ட வேண்டும். உங்கள் உடற்பயிற்சிகளை சரியான முறையில் செய்து முடித்தாலே போதும், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தமாகும். 

நீங்கள் வீட்டில் பயிற்சி செய்பவராக இருந்தால் அந்தளவு பயிற்சியில் நீங்கள் ஈடுபடாமல் இருக்கலாம். அப்படியானால் நீங்கள் ஏன் உங்கள் சூழலை மாற்றக் கூடாது? ஒழுங்காக பயிற்சியில் ஈடுபட வேண்டுமானால் வகுப்புக்கு செல்லுங்கள் அல்லது ஜிம்மிற்கு செல்லுங்கள் அல்லது ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் செயல்படுங்கள். 

ஒவ்வொரு உடற்பயிற்சியின் போதும், பளுவின் அளவை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். அதேப்போல் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்; உதாரணத்திற்கு, “3 வாரத்தில் பெஞ்ச் ப்ரெஸ்ஸை 5 பவுண்ட் அதிகரிப்பது”. இவ்வகையான சின்ன சின்ன இலக்கு உங்களை கிடைக்க போகும் பலனின் மீது கவனத்துடன் இருக்க வைக்கும். இதனால் வேகமாக திடமாக மாறலாம். 

தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது முக்கியம் தான். ஆனால் அதே அளவில் தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதும் மிகவும் முக்கியமாகும். ஒரே தசைகளுக்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வேலை கொடுக்க கூடாது. தசை வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமாகும். உங்கள் தசைகளுக்கு குறைந்தது 48 மணிநேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும்.. அதனால் புதிய தசை நார்கள் வளர்ச்சியடையும். மேலும் நன்றாக சாப்பிடவும் வேண்டும். காரணம், தசை வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் ரொம்ப முக்கியமாகும். 

உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, ஒவ்வொரு உடற்பயிற்சிக்கும் இடையே 30-45 நொடி இடைவெளி மட்டுமே வழங்க வேண்டும். நீண்ட நேரம் ஓய்வெடுக்காதீர்கள்.

posted from Bloggeroid

சாய்ந்த நிலை புஷ் அப்ஸ்

சாய்ந்த நிலை புஷ் அப்ஸ்
Author: மதன்
இந்த பயிற்சியை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் செய்யலாம். விரிந்த மார்பை அடைய விரும்புபவர்கள் இந்த பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சி சாதாரண புஷ் அப்ஸ் பயிற்சியை போன்று அல்லாமல் சற்று வேறுபட்டது. 

ஆனால் இந்த முறை விரைவில் அதிக பலன் களை தரவல்லது. முதலில் ஒரு சேரை எடுத்துகொள்ளவும். இந்த பயிற்சி செய்ய சேரில் கைகளை ஊன்றி கால்களை தரையில் ஊன்ற வேண்டும். உங்கள் உடல் 45 முதல் 90 டிகிரியில் (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். 

புஷ் அப்ஸ் முறையில் பயிற்சி செய்வதை போலவே இதிலும் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருக்கும் இந்த பயிற்சி படிப்படியாக எளிதாக செய்யவரும். 

வயிற்றுப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறையவும், கால்களுக்கு வலிமை தரவும். மார்பு பகுதி விரிவடையவும் இந்த பயிற்சியை செய்யலாம். உங்களால் முடிந்த எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். அல்லது தினமும் 15 நிமிடம் செய்யலாம்

posted from Bloggeroid

குதிகால் வலியை போக்கும் பயிற்சி

குதிகால் வலியை போக்கும் பயிற்சி
| Author:மதன்
இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தும் பிரச்சனை என்னவென்றால் அது தொப்பை மற்றும் கால்வலி. இந்த பயிற்சி குதிகால் வலி உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை அடையலாம். 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் 3 அடி அகலம் விட்டு நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை படத்தில் உள்ளபடி பிடித்து கொண்டு கால்களின் முன்பாதம் மட்டும் தரையில் படும்படி படம் 1-ல் உள்ளபடி நிற்கவும். 

பின்னர் முட்டிவரை கால்களை மடக்கி (சேரில் உட்காருவதை போல் ) உட்காரும் நிலையில் இருக்கவும். ஆனால் முன்கால் பாதங்கள் மட்டுமே தரையில் பட (படம் 2-ல் உள்ளபடி) வேண்டும். 

இந்த நிலையில் சிறிது நேரம் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். தினமும் இருவேளை இந்த பயிற்சியை செய்து வந்தால் கால்வலி படிப்படியாக சரியாகும்

posted from Bloggeroid

முதுகு மற்றும் முக்கிய தசைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி

முதுகு மற்றும் முக்கிய தசைகளுக்கு வலிமை தரும் உடற்பயிற்சி
Author: மதன்
இப்பயிற்சி தரையில் படுத்துக்கொண்டு செய்யும் பயிற்சி ஆகும். இப்பயிற்சிக்கு நடுதர தீவிரம் (medium-intensity exercise) உடற்பயிற்சி என்று பெயர். இப்பயிற்சியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 



முதலில் விரிப்பில் கைகளை பக்கவாட்டில் வைத்தபடி குப்புற படுக்க வேண்டும். இதுவே இந்த உடற்பயிற்சியின் முதல் படி ஆகும். 

உங்கள் கைகளை முன்பக்கமாக தலையை ஒட்டி நீட்டவும். மேலும் கைகளை முட்டி வரை மடித்து தலை பக்கமாக கொண்டு சென்று காதில் அருகே வைக்கவும். 

இப்போது உங்கள் முதுகு தசைகளை பயன்படுத்தி தரையிலிருந்து மார்பு பகுதியினை மேலே தூக்க வேண்டும். பிறகு கை மற்றும் கழுத்து பகுதியினை உங்கள் முதுகு பகுதிக்கு ஏற்றபடி மேலே நேராக நீட்டவும்.

இப்போது மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் உங்கள் கால்களை தூக்க கூடாது. வயிற்று பகுதியில் இருந்து கால் பகுதி வரை தரையில் பதிந்த படி (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். மேலும் தலையினை 8 அங்குலத்திற்கு மேலாக உயர்த்த வேண்டாம். 

இந்த நிலையில் இருந்த படியே 20 எண்ண வேண்டும். பின்னர் தலையை கீழே இறக்கி, கைகளை உடலோடு ஒட்டி வைத்து 2 விநாடிகள் ஓய்வு எடுக்கவும். இவ்வாறு 15 நிமிடம் செய்ய வேண்டும். 

6 வாரத்திற்கு இப்பயிற்சியினை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் மற்றும் ஒரு நாளில் 3 முறை வீதம் இப்பயிற்சி செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும். 

இந்த பயிற்சி செய்வதால் முதுகு மற்றும் முக்கிய தசைகள் வலிமையடைகிறது மேலும் வலையும் தன்மையை கொடுக்கிறது. 

முதுகு வலி உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே இந்த பயிற்சியை செய்ய வேண்டும். நீங்கள் தவறாக இப்பயிற்சி செய்தால் முதுகு வலி ஏற்படும். எனவே சரியாக செய்து முதுகினை வலிமையடைய செய்யுங்கள்

posted from Bloggeroid

பெண்களுக்கு அழகான உடலமைப்பை தரும் உடற்பயிற்சி

பெண்களுக்கு அழகான உடலமைப்பை தரும் உடற்பயிற்சி
Author: மதன்
உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது. 



உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது. வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும். 

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும். எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாத பெண்கள், 2வது ட்ரைமெஸ்டரில் உடற்பயிற்சிகள் செய்யலாம். 

அது முதுகுவலி, மலச்சிக்கல் வராமல் காக்கும். வாக்கிங் மிகச் சிறந்த உடற்பயிற்சி. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியம். அரை மணி நேரம் மிதமான வேகத்தில் நல்ல காற்றோட்டமான சூழலில் நடக்கலாம். 

யோகாவும் சிறந்த பயிற்சி.ஜிம்முக்கு சென்று வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்து கிடைக்கும் வாட்டசாட்டமான உடல் மட்டுமே ஆரோக்கியத்தை குறிப்பதாக  எடுத்துக்கொள்ள முடியாது. 

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதனதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை அறிந்து அதை பின்பற்றியே உடற்பயிற்சி செய்ய வேண்டும்

posted from Bloggeroid

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம்
Author: மதன்
ஓய்வு, உறக்கம், உடற்பயிற்சி இவை மூன்றும் மனிதனுக்கு அவசியத் தேவையாகும். ஆனால் அவை அளவோடு இருக்க வேண்டும். தேங்கிய குட்டை நீர் சாக்கடையாக மாறிவிடும். ஓடாத இயந்திரம் பழுதாகிவிடும். உழைக்காத, உடற்பயிற்சி செய்யாத உடலும் உருக் குலைந்துவிடும். 



உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை. ஏன்னொனில் அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது இல்லை. எனவே இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடலை ஆரோக்கியமாகவும், நோய் வராமலும் பாதுகாக்க முடியும். உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும், நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும், தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும். உண்ட உணவு எளிதில் சீரணமடையும். 

அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும், இதயம் பலப்படும். நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும். 

மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் என்பார்கள். விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும். இந்த மெல்லோட்டத்தை ஆண் பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது. 

பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். 

தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம். உடற்பயிற்சி மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது, நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது, உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது. 

இதயத் தசைகள் வலுவாக்குகிறது, இதயம் சுருங்கி விரியும்போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது, உடலின் தசைகள் வலுப்பெறுகிறது, எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது, முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது. மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்

posted from Bloggeroid

முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள

முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள்
Author: மதன்
உடற்பயிற்சி என்றால் வேர்க்க விறுவிறுக்க செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உடல் ஓரளவுக்கு வலியில்லாமல் இருக்க சில எளிய உடற்பயிற்சிகளை கடைபிடிக்கலாம்.



ஒவ்வொரு உட‌ற்ப‌யிற்சியையும் 5 முறை அள‌விற்கு செய்ய‌லாம். நன்கு பழகிய பின்பு படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகாரிக்கலாம்.

கைக‌ளுக்குக்கான உட‌ற்ப‌யிற்சியில் இர‌ண்டு கைக‌ளையும் ப‌க்க‌வாட்டில் நீட்டி முன்னும் பின்னுமாக‌ சுழ‌ற்ற‌ வேண்டும். இத‌னால் கை தோள்ப‌ட்டை வ‌லி கையில் உள்ள‌ ச‌தை குறைய‌ ந‌ல்ல‌து.

தோப்பு க‌ர‌ண‌ம் போடுவ‌து போல் இடுப்பில் கை வைத்து கொண்டு பாதி அள‌விற்கு உட்கார்ந்து எழும்பலாம். எல்லாம் ஒரு 5 முறை என்ற அள‌விற்கு செய்ய‌லாம். இது மூட்டு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

இடுப்பில் கை வைத்து கொண்டு நேராக‌ நின்று கொண்டு இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம். இது இடுப்பு வ‌லிக்கு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சி. த‌லையை ம‌ட்டும் மேலும் கீழும், இட‌து வ‌ல‌து புற‌ங்க‌ளில் சுழ‌ற்ற‌லாம், இது க‌ழுத்து நல்ல‌ உட‌ற்ப‌யிற்சி.

உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காதவர்கள் அப்ப‌டியே ஒரே மூச்சாக வேலை செய்யாம‌ல் இப்ப‌டி சின்ன‌ சின்ன‌ உட‌ற்ப‌யிற்சிக‌ளை செய்து கொண்டே வீட்டு வேலையை செய்ய‌லாம்.

துணி துவைக்க கூட அடித்து துவைக்க எதிரில் கல் இருக்கும். துணி துவைக்க‌ வாஷிங் மிஷின்தான். ஆனால் சில‌ டோர் மேட்க‌ளை கையில்தான் துவைக்க‌ வேண்டி வ‌ரும், அதை ந‌ல்ல‌ சோப்பு த‌ண்ணீரில் ஊற‌வைத்து விட்டு கீழே போட்டு நாலு மிதி மிதிச்சா அழுக்கும் போகும் கால் வ‌லிக்கும் ஒரு ந‌ல்ல‌ உட‌ற்ப‌யிற்சியாகுது.

குழந்தைகளை குளிக்க வைக்க கூட குறுக்கு வலிக்க குனிந்து குளிக்க வைக்காமல் கீழே ஒரு சின்ன ஸ்டூல் போட்டு குளிக்க வைக்கலாம்.

கணினி முன்பு அரைமணி நேரத்துக்கு மேல் உட்காராதீர்கள். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். சேரில் உட்கார்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

இரவு தூங்க போகும், காலை எழும்பும் போதும் கூட உட்கார்ந்து கொண்டு நேராக இரண்டு காலின் பெருவிரலை தொடவேண்டும். இப்படி செய்வதாலும் முதுகு வலி சரியாகும்

posted from Bloggeroid

உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம

உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம்
Author: மதன்
உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல்படுத்துவது முக்கியம்.



நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.

1. நடைப் பயிற்சி 2. ஓட்டப்பயிற்சி 3. நீச்சல் பயிற்சி 4. சைக்கிளிங்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம்.

எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும்.

விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும். இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள்

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும் 2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும் 3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும் 4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும் 5. தோற்றப் பொலிவு கூடும் 6. உடல் பலம் கூடும் 7. தன்னம்பிக்கை அதிகரிக்கு

posted from Bloggeroid

அதிகப்படியான சதையை குறைக்க எளிய பயிற்சி

அதிகப்படியான சதையை குறைக்க எளிய பயிற்சி
Author: மதன்

சில பெண்களுக்கு தொடை மற்றும் பின்புறத்தில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்களுக்கு எந்த உடை போட்டாலும் பார்க்க அசிங்கமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான பயிற்சி இது.



செய்முறை: விரிப்பில் கால்களை நீட்டி குப்புற படுக்கவும். கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்கட்டும். இந்த நிலையில் மெதுவாக தலையை மார்பு வரை முன்னால் தூக்க வேண்டும். பின்னர் மெதுவாக வலது காலை மட்டும் 45 டிகிரியில் தூக்கவும். கைகளை தரையில் இருந்து எடுக்கக் கூடாது. (படத்தில் உள்ளபடி) இப்போது உங்கள் வயிறு, தொடை, மார்பு பகுதிகள் தரையில் படிந்த நிலையில் இருக்கும்.

இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவேண்டும். பின்னர் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு பக்கத்திற்கு 15 செட் என இரு பக்கமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரிய ஆரம்பிக்கும். 3 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்

posted from Bloggeroid

இதயத் துடிப்பை உயர்த்தும் கார்டியோ பயிற்சிகள்

இதயத் துடிப்பை உயர்த்தும் கார்டியோ பயிற்சிகள்
Author: மதன்
பெண்களின் பாதுகாப்பு பெருமளவு குறைந்து வரும் இந்த காலத்தில் அவர்களுடைய உடல் வலிமையாக இருக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே, வெளியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் மற்றும் கற்பழிப்புகள் போன்றவற்றை எதிர்த்து தாக்குதல் தொடுக்க அவர்கள் உடற்பயிற்சிகள் செய்து உடலை வலிமையாக வைத்திருக்க வேண்டும். 



பளு தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் பெண்களின் உடல் வலிமையடைகிறது. பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே உதவும் சில பிரத்யோகமான உடற்பயிற்சிகள் உள்ளன. ஜிம்மிங் என்பது ஒரு வகையான உடல் ரீதியான பயிற்சி தான். 

இந்த உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை குறைக்கவும் மற்றும எண்டோர்பின்களை அதிகரிக்கவும் செய்கின்றன. என்டோர்பின் என்பது உடலை புத்துணர்வாக வைக்க உதவும் ஹார்மோனாகும். ஊடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தமும் குறைகிறது. 

நீங்கள் உடற்பயிற்சிகள் செய்த பின்னர் நீங்கள் ஓய்வாக இருப்பதையும், மகிழ்ச்சியுடன் ‘இதுவல்லவோ வாழ்க்கை’ என்று மகிழ்ச்சியுடன் இருப்பதையும் உணருவீர்கள். இதயத்தின் வேலை செய்யும் திறனை ஜிம் பயிற்சிகள் வெகுவாக மேம்படுத்துகின்றன. 

இதயத் துடிப்பை உயர்த்தும் கார்டியோ என்ற சிறப்பு உடற்பயிற்சிகளும் மற்றும் உடலின் உறுப்புகளை சிறப்புற பணி செய்ய வைக்கும் உடற்பயிற்சிகளும் ஜிம்களில் கற்றுத் தரப்படுகின்றன. 

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலிற்குள் சென்று வரும் ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் சுழற்சி செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, உடலின் அமைப்பு உறுதிப்படுத்தப்படுகிற. ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்

posted from Bloggeroid

இதயக் கோளாறை தவிர்க்க பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் August 30th, 2014 | Author: Joseph ஜிம்களில் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஃபிட் ஆகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். தொப்பை, இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்க விரும்பும் பெண்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சிகள் செய்வதால், நமது உடலின் சக்தி அளவுகள் அதிகரிக்கின்றன.    உடற்பயிற்சிகள் செய்வதால் செல்கள் மற்றும் தசைகளில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படுகின்றன மற்றும் உடல் உறுப்புகள் மீண்டும் பலம் பெறுகின்றன. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள்.  இப்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகிறது. மேலும் குடும்ப பெண்களுக்கு வீட்டில் இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் துணி துவைப்பது. மாடி ஏறுவது, போன்றவற்றிற்கு மிஷினை பயன்படுத்தாமல் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு செய்ய முடியாதவர்கள் வாரம் 5 நாட்கள் நடைப்பயிற்சியை மட்டுமாவது செய்ய வேண்டும். அப்போது தான் 35 வயதிற்கு மேல் வரும் உடல் கோளாறுகளை தவிர்க்க முடியும்.  நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவர்கள் உடற்பயிற்சியின் பலனை எளிதில் உணர்ந்திருப்பார்கள். இந்த வகையில் நாள் தோறும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் மிகவும் புத்துணர்வுடன், உற்சாகத்துடனும் இருப்பார்கள்

இதயக் கோளாறை தவிர்க்க பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம்
Author: மதன்
ஜிம்களில் உடற்பயிற்சி செய்வதால் உடல் ஃபிட் ஆகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். தொப்பை, இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் வருவதைத் தவிர்க்க விரும்பும் பெண்கள் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். உடற்பயிற்சிகள் செய்வதால், நமது உடலின் சக்தி அளவுகள் அதிகரிக்கின்றன. 



 

உடற்பயிற்சிகள் செய்வதால் செல்கள் மற்றும் தசைகளில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படுகின்றன மற்றும் உடல் உறுப்புகள் மீண்டும் பலம் பெறுகின்றன. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள். 

இப்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமாகிறது. மேலும் குடும்ப பெண்களுக்கு வீட்டில் இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் துணி துவைப்பது. மாடி ஏறுவது, போன்றவற்றிற்கு மிஷினை பயன்படுத்தாமல் உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு செய்ய முடியாதவர்கள் வாரம் 5 நாட்கள் நடைப்பயிற்சியை மட்டுமாவது செய்ய வேண்டும். அப்போது தான் 35 வயதிற்கு மேல் வரும் உடல் கோளாறுகளை தவிர்க்க முடியும். 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவர்கள் உடற்பயிற்சியின் பலனை எளிதில் உணர்ந்திருப்பார்கள். இந்த வகையில் நாள் தோறும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் மிகவும் புத்துணர்வுடன், உற்சாகத்துடனும் இருப்பார்கள்

posted from Bloggeroid

இடுப்பு சதையை குறைய செய்யும் லெக் லிப்டிங் பயிற்சி

இடுப்பு சதையை குறைய செய்யும் லெக் லிப்டிங் பயிற்சி
| Author: மதன்
இந்த பயிற்சி பொதுவாக பெண்களுக்கு ஏற்ற பயிற்சியாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் உணவு பொருட்கள் வீணாக கூடாது என்று அனைத்தையும் சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்து கொள்கின்றனர். இவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அவர்களுக்கு பயிற்சி செய்ய நேரம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சி ஒன்று உள்ளது. அது தான் லெக் லிப்டிங் பயிற்சி. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. பயிற்சி செய்ய ஆரம்பித்த சில நாள்களில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தரையில் ஊன்றியபடி இருக்க வேண்டும். பின்னர் கால்களை 90 டிகிரியில்  மேலே தூக்கவும். பின்னர் கைககளை தரையில் ஊன்றியபடி கால்களை இன்னும் மேலே தூக்கவும்.  இப்போது உங்கள் எடை முழுவதும் கைகளில் தாங்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் மீண்டும் 90 டிகிரியில் கால்களை கொண்டு வரவும். பின்னர் திரும்பவும் கால்களை தூக்கவும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 25 முறை செய்யவும்

posted from Bloggeroid