உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!

பின் அது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட காரியமில்லை என்று நாசா விளக்கமளித்து
இருந்தாலும் அதை பெரும்பாலான சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பவில்லை, இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் முதல்முறை நிகழவில்லை. நாசாவில் பணிபுரிந்த முன்னாள் விஞ்ஞானிகள் கூட ஏலியன் சார்ந்த உண்மைகள் அமெரிக்க அரசு மற்றும் நாசாவினால் மறைக்கப்படுவதாக தகவல்கள் அளித்துள்ளனர்.
ஆனால், எதற்கும் செவி கொடுக்காமல் தனது பணிகளையும் ஆய்வுகளையும் நாசா தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அப்படியாக, நாசா வேண்டுமானால் ஏலியன் சார்ந்த உண்மைகளை மறைக்கலாம் ஆனால், நாசாவின் கேமிராக்களோ எதையும் மறைப்பதில்லை, நிகழ்வுகளை படமாக்கி காட்சிப்படுத்தி விடுகிறது, சில சமயம் காட்டிக்கொடுத்து விடுகிறது என்றே கூறலாம்.
நாசா கேமராக்களில் மீண்டும் யுஎஃப்ஒ (UFO) எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை (Unidentified Flying Object) பதிவாகியுள்ளது.
வழக்கமாக ஏதாவது ஒரு கேமிராவில் தான் இதுபோன்ற மர்மான பொருட்கள் பதிவாகும். இம்முறை இரண்டு வெவ்வேறு கேமராக்களில் ஒரே நேரத்தில் ஒரே யுஎஃப்ஒ காணப்படுகிறது.
இரண்டு பதிவுகளிலும் முறைப்படியாக மர்ம பொருள் காட்சி அளிக்கிறது இந்த நிகழ்வு ஒரு கணினி பிழை போன்றோ, போலி போன்றோ தென்படவில்லை.
பதிவாகியுள்ள மர்ம பொருள் ஆனது கன வடிவிலான யுஎஃப்ஒ போன்றும், சூரியனுக்கு அருகேயும் அது காணப்படுகிறது முக்கியமாக அது நம் பூமியின் அளவை விட பெரியதாக இருந்துள்ளது.
இஐடி 195 மற்றும் இஐடி 171 என்ற இரண்டு கேமராக்கள் 25 மணி நேரம் இடைவெளியில் எடுத்த புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது அந்த மர்ம பொருள் எந்தவிதமான முரண்பாடும் இல்லாமல் அதே இடத்தில் உள்ளது.
இது சார்ந்த விளக்கத்தில் யுஎஃப்ஒ தேடலாளர்கள் யுஎஃப்ஒ ஆனது சூரியனின் நிற மற்றும் ஒளிமண்டல அடுக்குகளில் இருந்து ஆற்றலை உறிஞ்சுக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
வேற்றுகிரகவாசிகள் ஆற்றல் மற்றும் எரிபொருளை நம்பித்தான் உள்ளனர், ஆகையால் சூரியன் தான் அவர்களின் இறுதி ஆற்றல் ஆதாரமாக இருக்கலாம் என்றும் கோட்பாடுகள் உள்ளன
யுஎஃப்ஒ தேடலாளர்கள் வானுலகம் போன்ற இந்த கன வடிவ மர்மத்தை ஒரு வேற்று கிரகத்தின் விண்கலம் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment