
மெக்சிகோ: மெக்சிகோவில்
பெப்போகெட்பெட்ல் எரிமலை 4
முறை வெடித்து சிதறியது.
இந்த எரிமலை புகையை
கக்கிவரும் நிலையில்
அடையாளம் தெரியாத,
சென்றதாக பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. பூமியில்
வாழும் உயிரினங்களை தவிர
பிற கிரகங்களில் உயிரினங்கள்
உள்ளதா என்ற கேள்வியும்,
சந்தேகமும் காலம் காலமாக
தொடர்ந்து கொண்டுதான்
உள்ளது. அவ்வப்போது பறக்கும்
தட்டுகள் தென்படுவதாகவும்,
வேற்றுகிரகவாசிகள் வந்து
செல்வதாகவும் கூறப்பட்டாலும்
உறுதியான ஆதாரங்கள் உள்ளதா
என்பது கேள்வி குறிதான்.
இதுகுறித்த ஆய்வுகளும் ஒரு
பக்கம் சென்று கொண்டுதான்
இருக்கின்றன. இந்நிலையில்
இதேபோன்ற ஒரு பரபரப்பு
மெக்சிகோவில் எழுந்துள்ளது.
மெக்சிகோவில் உள்ள
பியூப்லா மாநிலத்தில்
பெப்போகெட்பெட்ல் எரிமலை
உள்ளது. இது சுமார் 18 ஆயிரம்
அடி உயரம் கொண்டதாகும். இது
நேற்று முன்தினம் வெடித்து
சிதறியது. சுமார் 4 முறை
பெப்போகெட்பெட்ல் எரிமலை
வெடித்து சிதறி, நெருப்பை
உமிழ்ந்தது. இதில் இருந்து
கரும்புகை வெளியேறி
வருகிறது. இந்நிலையில், இந்த
எரிமலை வெடிப்பை
கண்காணித்து வரும் பல்வேறு
அமைப்புகளின் கேமரா
கண்களில் ஒரு அதிசய வெளிச்சம்
அனைவரது பார்வையையும்
விரிவடையச் ெசய்துள்ளது.
இந்த வீடியோ பதிவில்,
அடையாளம் தெரியாத ஒரு
விண்கலம் எரிமலைக்கு மேல்
நின்று இருப்பதும், அது சில
நிமிடங்களுக்கு பின்னர்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போனதும் பதிவாகி
உள்ளது. இது வேற்று
கிரகவாசிகள்தான் என ஒருபக்கம்
விவாதம் எழுந்துள்ளது.
வேற்றுகிரகவாசிகள்தான்
பூமியின் புவிவெப்பம்
உள்ளிட்டவற்றை
கண்காணிப்பதாக கருத்து
கூறப்பட்டுள்ளது. எரிமலை
வெடிப்பை அவர்கள்
பார்வையிடுவது ஏன் என்பதும்,
அவர்கள்தான் பூமியின்
எரிமலைகளை வெடிக்கச்
செய்கிறார்கள்; அதை
கட்டுப்படுத்துகிறார்கள் என்றும்
பல்வேறு விவாதங்கள் சூடாக
பரவிக் கொண்டிருக்கின்றன.
மெக்சிகோவில் இதுபோன்ற
வேற்றுகிரகவாசிகளின்
விண்கலம் தெரிவது இது முதல்
முறை அல்ல. ஏற்கனவே கடந்த
பிப்ரவரி மாதம் இதே எரிமலை
வெடித்து சிதறியபோதும்
அடையாளம் தெரியாத ஒரு
பொருள் கிடைமட்டமாக
தெரிந்ததாகவும் வீடியோ
பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் மெக்சிகோ
எரிமலை ஒன்றின் அருகே
பறக்கும் குதிரை போன்ற ஒரு
விண்கலம் கடந்து சென்றதாகவும்
கூறப்பட்டது. எனவே
வேற்றுகிரகவாசிகள்தான்
அவ்வப்போது பூமிக்கு வந்து
செல்கின்றனர் என்ற பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment